Sunday, February 13, 2011

ஆதலினால்...(சில காதல் கவிதைகள்...)

விழிகளின் குழந்தைகள்..!




உன்
விழிகளை
நோக்கும் நொடி எல்லாம்..
என் கனவுக் கருப்பைகள்,
ஆயிரம் கவிதைக் குழந்தைகளை
பிரசவிக்கையில்...
பத்து மாதங்கள் எதற்கு...?

புன்னகைச் சாலை.


இந்த சாலையில் மட்டும்
நடந்து செல்லாதீர்...
அவளது புன்னகைகளை ...
இந்த சாலையெங்கும்
பதியமிட்டிருக்கிறாள்..!

உனக்கானது..!

'எனக்கானதேல்லாம்..
உனக்கானது...'
என்று சொன்ன நீ...
என்னை மட்டும்
எனக்கு
தர மறுக்கிறாய்..!

-நிலா முகிலன்.




3 comments:

Anonymous said...

nice!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு...

Rajasubramanian S said...

காதலிப்பவர்கள் எல்லாம் கவிஞராகி விடுகிறார்கள்.கவிஞரே காதலித்தால் கேட்க வேண்டுமா? பொட்டில் பதியும் வரிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...