
வழக்கமாக இந்தி திரைப்படங்கள் ஒரே மாதிர்யான கதைகள் கொண்டவைகளாக இருக்கும். ஒன்று காதல் கதைகள் அல்லது சரித்திர கதைகள் அல்லது நிழல் மனிதர்களின் கதைகள் அல்லது குடும்ப கதைகள். அத்தி பூத்தாற்போல சில அபூர்வ அற்புத படங்கள் வருவதுண்டு. அப்படி பட்ட ஒரு படம் தன் 'ஆமிர்'
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க... முற்றிலும் புதுமுகங்களான தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டு எந்தவித மசாலாத்தனங்கள் இல்லாமல் மரத்தை சுற்றி பாடும் பாடல்கள் இல்லாமல், அமச்சூர்த்தனமான சண்டை காட்சிகள் இல்லாமல் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்துக்கு நல்ல கருத்து சொல்லும் படமாக வெளி வந்திருக்கிறது.
நாட்டில் சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் பல நல்ல இஸ்லாமிய சகோதரர்கள் சமுதாயத்தால் பழி வாங்கப்படுவது முகத்தில் அறைந்தார் போல சொல்லப்படுகிறது. திரைப்படம் நடக்கும் காலம் சில மணித்துளிகளே. கதாநாயகனுக்கு படம் முழுவதும் ஒரே உடைதான். என பல புதுமைகள் இப்படத்தில் உள்ளன.
சரி கதை என்ன?


சரியானதும் எழுந்து பெட்டியை தூக்கி கொண்டு ஓடியவனை தேட ஆரம்பிக்கிறான். அப்போது அவன் விடுதியில் சந்தித்த வேசி அவனுடைய உதவிக்கு வருகிறாள். திருடர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்கிறாள். மதுவின் மயக்கத்தில் இருக்கும் அவர்களை அடித்து போடுகிறான் ஆமிர். அவர்கள் பயந்த படி அந்த சிவப்பு பெட்டியை எடுத்து அவனிடம் கொடுக்க அதை பெற்று கொண்டு அந்த மொட்டை தலை மனிதன் சொன்ன பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறான். அவனை மீண்டும் அலை பேசியில் அழைக்கும் மொட்டை தலை மனிதன், ஊர்தி எண் 83 இல் ஏற சொல்கிறான். ஏறி அமரும் ஆமிர், பஸ் செல்ல துவங்கியதும் வரும் அலைபேசி அழைப்பை எடுத்து பேச அவன் அமர்ந்திருக்கும் இருக்கையின் அடியில் அந்த பெட்டியை வைத்து விட்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடுமாறு கட்டளை வருகிறது. குழப்பமாக நடந்த நிகழ்வுகளை யோசனை செய்து பார்க்கும் ஆமிர், அந்த திருடர்கள் மூலம் பெறப்பட்ட சிவப்பு பெட்டி மாற்றப்பட்டிருப்பதையும் தற்போது அப்பெட்டியில் குண்டு இருப்பதையும் அந்த பஸ் வெடித்து சிதற தான் கருவி ஆக்க பட்டிருப்பதையும் உணர்கிறான்.
அந்த மொட்டை தலை மனிதன் சொன்னவாறு தன் இருக்கையின் அடியில் பெட்டியை வைத்து விட்டு பஸ் விட்டு கீழிறங்குகிறான். இன்னும் இரு நிமிடங்களில் குண்டு வெடிக்க போகிறது. அப்போது ஆமிர் அமர்ந்த இருக்கையில் ஒரு குழந்தை அமர்ந்து அவனுக்கு 'டாட்டா' காட்டுகிறது. உடைந்து போகிறான் ஆமிர். அடுத்து அவன் எடுத்த முடிவு கண் கலங்க வைக்கிறது.
ஆமிர் தரமான ஒரு 'இந்தி'ய சினிமா.