Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts
Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts

Wednesday, June 27, 2012

என் நிலாவும்.. நிலாத் துண்டுகளும்..








'நிலா வேணுமா...'
கேட்ட என் குட்டி நிலாவிடம்...
'ஆம்' என்று சொல்ல..
நீரில் தெரிந்த நிலாவை,
தன் குட்டிக் கரங்களால்...
அள்ளியெடுத்து
என் கைகளில் கொட்டினாள்.


'நிலா போய்டுச்சே''
என்ற என் குட்டி நிலாவின்
துக்கம் தாளாமல்,
ஒரு நிலவை
வாங்கி அளித்தேன்.


' நிலாவை' கொஞ்சி,
கூத்தாடி,
கட்டி அணைத்தபடி,
நிலவொளியில்
அவள் உறங்குவதை..
நிலாவே
பொறாமையுடன் பார்த்தது.

'நிலாவுக்கு உடம்பு சுகமில்லை'
டாக்டர் சொன்னதும்,
குட்டி நிலாவுடன்
எடுத்து சென்றிருந்த
'நிலா'
பதற்றத்தில் கீழே விழுந்து
உடைந்தது.

'நிலா உடஞ்சிருச்சி'
முனகிய நிலாவுக்கு...
உடைந்த நிலாத் துண்டுகளை,
பொறுக்க தெம்பில்லை.

இன்று,
நிலா இல்லை.
உடைந்த நிலாத் துண்டுகளை
ஓட்டத் தெரியாமல்
அழுதுகொண்டிருக்கிறேன் நான்.





- நிலா முகிலன்.

Monday, August 31, 2009

குட்டிக் கவிதை -7

மழை
=====

மேகக் காதலன் கைவிட்டதால்....

நீர்த் துளியின்

தற்கொலை...

.....

Wednesday, August 19, 2009

குட்டிக் கவிதை -6

மரணம்...!
========
மனித
வாக்கியத்தின்...
முற்றுப்புள்ளி
-------------------

Wednesday, July 29, 2009

குட்டிக் கவிதை - 4

வளைகாப்பு
==========


ஜனனத்தின் காரணம்,
ஆணும் பெண்ணும்...
ஏன் பெண்ணுக்கு மட்டும் கைவிலங்கு...?!

Saturday, July 25, 2009

குட்டிக் கவிதை -3

மெழுகுவர்த்தி..!
=============
ஒளித் தலைவனின்
அரசியல் தொண்டன்.

-நிலா முகிலன்.

குட்டிக் கவிதை -2

வயிறு
ஏழை வங்கியின்
காலியான
கஜானா..!

-நிலா முகிலன்

Friday, July 24, 2009

குட்டிக் கவிதை -1.

பாலியல் தொழிலாளி.
-----------------------------
'தொடாதே'
பலகையில்
பல 'கை'கள்.

- நிலாமுகிலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...