Showing posts with label கானா. Show all posts
Showing posts with label கானா. Show all posts

Thursday, March 11, 2010

செல்லு போனு கொல்லு(ம்) போனு -ஒரு ஜாலி கானா..!


இதனை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.


டவுசர் கூட போட மறந்து
டவுனுக்குள்ள அலைவான்.
தம்மாதூண்டு செல்லுபோனு தான்
டவுன் ஆச்சினா அளுவான்.

சாவக் கெடக்கற பெருச கூட
சாவட்டும்னு விடுவான்.
சார்ஜ் இல்லாத செல்லுபோனுக்கு
டாப் அப் பண்ண அலைவான்.

ஓடி ஒளச்ச அப்பனுக்கு
கை கால் அமுக்க நோவும்.
ஒரு வார டாவுக்கு
எஸ் எம் எஸ் அனுப்ப ஏங்கும்

நீயும் அவளும் பாக்கறதுக்கு
செல்லு 'மேட்டர' பதியும்.
ரூமுக்குள்ள நடப்பத பாத்து
ஊரு பூரா சிரிக்கும்.

செல் போன் இல்லா காலத்துல
நிம்மதியா இருந்த..
'செல்'லரிச்சு இந்த நாளு
ஆத்தாளையும் மறந்த...

-- நிலா முகிலன்

Saturday, January 16, 2010

'டமில் வால்க' - ஒரு ஜாலி கானா


இந்த படைப்பை வெளியிட்ட 'யூத்புல் விகடனுக்கு' நன்றி

'டமில் வால்க' தலிவரு
புள்ள இங்கிலீசு பேசும்
பிகரு கிட்ட தமில்ல பேசினா
இங்க்லீசுல ஏசும்!

பீச்சாங்கர பக்கம் போனா
ஏகப்பட்ட மீனு...
ஸ்டெல்லா காலேஜ் பொண்ணு கேக்குது
வாட் டூ யு மீனு..!

தங்க்லீசுல பேசினாக்கா
ஒன்னும் பிரியல...
இங்க்லீசு பேசாட்டி போனா
நீயும் தருதல..!

தொல காட்சி பொண்ணு எல்லாம்
தங்கலீசு பேச...
இதுங்க குப்பத்து டமில் பேச தான
எனக்கும் ஆச!

பிகுலு பார்ட்டி டகுலு டோமர்ன்னு
நானும் சொன்னாக்கா....
இந்த இங்க்லீசு பார்ட்டிங்க புரியாம
போடும் டண்டனக்க..!

நா குப்பத்து டமில் சொம்மா எட்த்து உட்டா..
இங்க்லீசு சனங்க மெர்சல் ஆகி ஓடும்
சுப்பனுக்கும் குப்பனுக்கும் பிரிற மாறி
டமில் நீயும் பேசினாக்க கொறஞ்சா பூடும்!

Sunday, January 10, 2010

காதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..!(ஒரு ஜாலி கானா..)


காதலிச்சி பாருன்னு
சொம்மாவா சொன்னாங்கோ...
நான் சொல்லறத கேட்டுபுட்டு
இன்னான்னு கேளுங்கோ.

அறியாத நேரத்துல
மூக்கு கீழா முடி மொளைக்கும்
புரியாத வயசுலதான்
லவ்வு மூடு ஸ்டார்ட் ஆவும்.

நா பாக்கும் பிகரு எல்லாம்
செட் ஆகி போச்சுதுங்கோ..
அழகான போண்ணுக்கல்லாம்
கல்யாணம் ஆச்சிதுங்கோ

இஸ்கூலு போற பொண்ணு
பல்சர் பார்ட்டி தேடுதுங்கோ..
காலேஜ் பொண்ணு எல்லாம்
டிஸ்கோ கூட்டி 'போ' ன்னு துங்கோ..

மிஸ்ட் காலு உட்டாக்கா..
மிஸ் ஆகி போவுதுங்கோ..
எஸ் எம் எஸ் அனுப்பினாக்கா
எஸ் ஆகி போகுதுங்கோ...

கிராமத்துல அத்த பொண்ணு
இருக்கான்னு தேத்திக்கிட்டேன்...
ஜல்லிக்கட்டு காளயடக்கி
ஒருத்தன் அவள தேத்திபுட்டான்.

ஊரெல்லாம் தேடி அலைஞ்சி
கவித போல ஒன்னு கிறுக்கி
எடுபிடியா நா திரிஞ்சி..
அவ என்ன பாத்து சிரிச்சி..

லவ்வு கொஞ்சம் செட் ஆகி,
ஊரு கொஞ்சம் சுத்திபுட்டா..
அயல் நாடு மாபிள்ள வந்தா
அண்ணான்னு சொல்லிபுட்டா..
--------

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...