Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, March 4, 2011

நகைச்சுவைக் குற்றங்கள்...

 
 
உலகத்தில் பல்வகை குற்றவாளிகள் இருக்கிறார்கள். கொடூரமானவர்கள், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் குற்றம் செய்பவர்கள், வஞ்சம் தீர்ப்பவர்கள் என. சில குற்றவாளிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து மாட்டிக் கொள்வார்கள். சிலசமயம் இவர்களின் குற்றங்கள் நகைப்புக்கு உரியதாகப் போய்விடுகிறது. அவ்வகை குற்றங்களை நாம் நகைச்சுவைக் குற்றங்களாக பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் நடந்த இரண்டு நகைச்சுவை குற்றங்களை இப்போது பார்க்கலாம்.
1. ஆம்புலன்ஸ் திருட்டு.
அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தின் லாரன்ஸ் நகரில், ஜாகப் என்பவன் ஒரு வார நாள் இறுதியில் தனது உத்தியோக உயர்வை முன்னிட்டு ஒரு பாரில் சகட்டு மேனிக்கு குடித்திருக்கிறான்.நள்ளிரவை தாண்டிய பொழுதில், பார் மூடும் நேரம் வெளிவந்து பார்க்க டாக்சிகள் எதுவும் கிடைக்காமல் வீட்டுக்கு எப்படி திரும்ப என யோசித்தவன், அருகே விளக்குடன் ஒரு எமர்ஜென்சிக்காக  நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வான் டிரைவரை மண்டையில் தான் குடித்த பீர் பாட்டிலால் அடித்து,  ஆம்புலன்சை கடத்திக்கொண்டு, குடி போதையிலேயே வீடு சென்ற ஜாகப், ஆம்புலன்ஸ் விளக்குகள் சுழலவிட்டவாறே, வீடு சென்று உறங்கிப் போனான். சிறிது நேரத்தில் வந்து போலீஸ் கை விலங்கிட்டபோது போதை தெளிந்தவன் ,  தன் வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் எதற்கு நிற்கிறது என போலீசிடம் கேட்டுள்ளான். அவனது உத்தியோகம் பறிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் திருடியது, குடிபோதையில் வண்டி ஒட்டியது மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது என குற்றங்கள் அவன் மேல் பதிவு செய்யப்பட்டு அய்யா இப்போது சிறையில்.

2. பிஞ்சு மனங்களில் நஞ்சு.
ப்ளோரிடா மாகணத்தில் உள்ள ஒரு நகரில், தனது பிள்ளைகளை பள்ளியில் விடப்போன தாய் சூசனுக்கு மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அணிந்து வந்த குறைந்த ஆடைகள்  கண்டு கடுப்பு. பள்ளியில் நடந்த பெற்றோர் பிள்ளைகள் மீட்டிங்கில், பள்ளியின் முதல்வரிடம் இதை பற்றி சொல்லி, பிள்ளைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் அப்படி குறைவான உடையிலும் லோ நெக் ப்ளவ்ஸ்களும் அணிந்து வந்தால் பிஞ்சுகளின் மனங்களில் நஞ்சு விதைக்க ஆளாக நேரும் என்பதால் அத்தகைய உடைகளை தடை செய்ய வேண்டும் என கேட்டார். முதல்வரோ, கூலாக, இது ப்ளோரிடா மாகாணம். இங்கு சூடு மிக அதிகம் எனவே அவர்களுக்கு வசதியான ஆடைகளை அணிகிறார்கள். அதை எல்லாம் தடை செய்ய முடியாது என கூற. மேலும் மேலும் வாக்குவாதம் முற்ற, 'ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்தால் மட்டுமே தடை கோர முடியும் என சொல்ல' ஆத்திரம் அடைந்த அந்த தாய், 'அப்படியானால் இப்படி வந்தால் மட்டும் ஆபாசம் என கூறுவீர்களா என சட்டென தனது ப்ளவ்ஸ் உள்ளே இருந்து, வெளியே எடுத்தது போட, முதல்வர் (உள்ளே இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் (!) ) கோவம் அடைந்தார். மேலும் அவரை கொவமஅடைய வைக்க, இரண்டையும்(எதை என்பதை சொல்ல தேவை இல்லை ) சேர்த்து வைத்து ... இப்படி இருந்தால் ஆபாசம் என சொல்வீர்களா ' என கத்த, இப்போது அந்த தாய் இண்டீஜெண்டாக பிகேவ் செய்ததற்காக அபராதம் விதிக்கப் பட்டு மூன்று மாதம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Friday, January 7, 2011

நகைச்சுவை குற்றங்கள்.

பல கொடூர, வன்மையான, பயங்கரமான குற்றங்கள் நிகழ்த்தும் குற்றவாளிகளின் மத்தியில், சிரிப்பு திருடன் சிங்காரவேலு போல சில குற்றவாளிகளும் இருக்கவே செய்கிறார்கள். பல நாளிதழ்களில், இணையதளங்களில் காணக் கிடைத்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு இது.

கோழி மிதித்து(சுட்டு)...
 
அமெரிக்காவின் மிளுவாக்கி நகரை சேர்ந்தவன் இருபத்தொரு வயது ரிக். ஹாலோவீன் நாள் என்பது, பிசாசுகளுக்காக ஒதுக்கப்பட்ட நாள். அன்றைய தினம் கடைக்கு சென்றிருந்த தன தாயை மிரட்ட திட்டம் போட்டு, கடையில் முகமூடி ஒன்றை வாங்கி வந்து, உடம்பு முழுக்க கருப்பு உடை அணிந்து,உள்ளிருந்து வேறொரு சாவியால் கதவை பூட்டி, தாயை பயமுறுத்த காத்திருந்தான்.  அவனது தாய் நான்சி தான் வைத்திருந்த சாவியால் வீட்டு கதவை திறந்து உள்ளே வந்து வாங்கிய பொருட்களை பரப்பி அடுக்கி வைக்கும் வரை காத்திருந்தவன் தடாரென தன அன்னை நான்ஸியின் முன் குதிக்க, அலறினாள் நான்சி. 'ஊட்டாண்ட இருக்கறது எல்லாம் சுருட்டிட்டு போக வந்துருக்கேன் ஒழுங்க எல்லாத்தையும் என்னாண்ட குடுத்துரு' என மிரட்ட, நான்சி, சட்டென கிட்செனின் ஒரு டிராவை திறந்து அங்கிருந்த .357 ரிவால்வரை எடுத்து ரிக்கை குறி பார்க்க, கல கலவென சிரித்த ரிக், ஆங்கிலத்தில் 'சுடு சுடு  பார்க்கலாம்' என கெக்கலிக்க, நான்சி குறிபார்த்து ரிவால்வரை இயக்க, குறி தவறாமல், ரிக்கின் குறியை பதம் பார்த்தது அந்த புல்லட். ' ஐயோ அம்மா' என (ஆங்கிலத்தில் தான்...) என கதறியபடி ரிக் விழ, உடனே நான்சி 911  எண்ணிற்கு போன் பண்ணி காவலரை அழைக்க, உடனே பறந்து வந்த அவர்கள், முகமூடியை கழட்டிய பின் தான் தனது மகனை சுட்டிருக்கிறோம் என புரிந்தது அந்த தாய்க்கு.

பின்னர் ஆபரேஷன் எல்லாம் செய்து ரிக் பிழைத்துவிட்டான். தாயை ஏமாற்றவே அப்படி செய்தேன் என ரிக்கும், தற்காப்புக்காகவே சுட்டேன் என நான்சியும்  கூற யாரும் கைது செய்யப்படவில்லை.

திருடனை போலீஸ் காப்பாற்றிய கதை.
 

அமெரிக்காவின் டெலவேர்  மாகணத்தில் நடைபெற்ற சம்பவம் இது. ஜான் பின்ச் என்ற 44 வயது நபர், ஆளில்லா பங்களாவில் கொள்ளையடிக்க ஒரு சன்னலை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறான். அவன் ஏற்கனவே இதே போல உள்ளே நுழைந்து திருடியதால், வீட்டுக்காரன் உள்ளேயும் சாவி போட்டு திறந்தால் மட்டுமே வெளியே வர கூடிய பூட்டை போட்டுவிட்டான்.

வெளியே இருந்து சன்னலை உடைத்து உயரமான இடத்திலிருந்து உள்ளே குதித்த ஜான் வெளியேற முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி பாரில் வைக்கப்பட்டிருந்த ஜின் வோட்கா என எதையும் விட்டு வைக்காது குடித்திருக்கிறான். மூன்று நாட்கள் உள்ளே இருந்தவன், தட்டு முட்டு சாமான் எல்லாம் போட்டு மேலேறி ஜன்னலை பிடித்த நேரம், அவன் ஏறி நின்ற மேசை, ஸ்டூல் எல்லாம் உருண்டு விழுந்து ஓடியதால், சன்னலை பிடித்து தொங்கியபடி திருடனான அவனே, 911 அழைத்து போலிசை உதவிக்கு கூப்பிடவேண்டிய நிர்பந்தம். அவனை காப்பாற்றிய கையோடு அவனுக்கு விலங்கு போட்டு அழைத்து சென்றனர் போலீஸ் .
--

Friday, November 6, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 5


தன தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்ட கதை.

அமெரிக்காவில் எந்த ஒரு ஆபத்தில் இருந்தாலும் , மக்கள் உடனே தொலைபேசியில் அழைப்பது 911 என்ற எண்ணை. தொலைபேசியில் நமது விவரம், நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து, நமது முகவரி எல்லாம் சொல்லி விட்டால் ( சொல்லாவிட்டாலும் நமது எண்ணை வைத்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்), எண்ணி ஏழு நிமிடத்திற்குள் காவலர்கள் நமது வீட்டுக்கதவை தட்டுவார்கள்.

அப்படித்தான் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கைன்ச்வில் பகுதியை சேர்ந்த வான் போவெல் என்ற 22 வயது வாலிபனிடம் இருந்து வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. அவனுடைய அழைப்பின் காரணம் தான் கொள்ளை அடிக்கப்பட்டது தான்.
"சரி எங்கிருந்து அழைக்கிறீர்கள் உங்கள் முகவரி என்ன? "என கேட்கப்பட்டதும் மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. காரணம் அழைத்தவன் தனது முகவரியை மறந்து விட்டிருந்தான். எனினும் அவன் அழைத்த எண்ணை வைத்து அவனது வீட்டை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை மேற்க்கொண்ட போலீஸ் கடைசியில் அவனையே கைது செய்தது தான் வேடிக்கை. தான் வைத்திருந்த மரிவானா என்ற போதை பொருள் மூட்டையை இருநபர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துவிட்டது. போதையில் இருந்ததால், 911 எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடிந்த அவனால் தனது முகவரியை சொல்ல முடியவில்லை. சட்டத்துக்கு விரோதமாக போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யபட்டான். அவனிடம் போதை மூட்டையை கொள்ளை அடித்த அந்த இருவரை காவல்துறை தேடி வருகிறது.

நேரம் சரி இல்லை.

ஆளற்ற ஒரு கட்டிடத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி விற்று காசு பார்க்க திட்டம் இட்டனர், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜெம்ஸ் ஆயர் மற்றும் பிரேட்ரிச்க் கில்லீ. அவர்கள் அதற்க்கு தேர்ந்தெடுத்த நேரம் சரி இல்லாமல் பொய் விட்டது.

ஆம் அவர்கள் உள்ளே புகுந்து திருடி கொண்டிருந்த சமயம், காவல் துறையினரின் ஒரு படையணியினரின் பயிற்சி முகாம் அங்கு அன்று நடத்த திட்டமிட்டிருந்தது அவர்களுக்கு தெரியாமல் போயிற்று. கட்டிடத்தின் உள்ளே ஒரு காவலதிகாரி பதுங்கி கொண்டு காவல் நாய் தன்னை கண்டுபிடிக்கிறதா என பார்ப்பதற்காக எப்போதும் உள்ள வழக்கமாக... ஒலிபெருக்கியில், காவல் நாய் கட்டிடத்தினுள் வருகிறது என்றும் உள்ளிருப்பவர்கள் உடனே வெளியேறாவிட்டால் நாயினால் கடி வாங்கப்படும் சாத்தியம் உண்டு என்றும் கூற, பதுங்கி இருந்த ஜெம்ஸ் ஆயர் தன்னை காவல் துறை கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி நடுங்கி கொண்டே வெளியே வந்து சரணடைந்தான். திடுக்கிட்ட அந்த அதிகாரி அவனை மேலும் விசாரிக்க தான் திருட வந்ததை ஒத்துக்கொண்டு தனது நண்பன் கில்லியையும் போட்டு கொடுக்க..இப்போது இருவரும் சிறையில்.

Saturday, October 3, 2009

நகைச்சுவை குற்றங்கள் -3


திருடன் போலீஸ் !!!!
====================

சிறையில் இருந்து விடுதலையான நியூயோர்க்கை சேர்ந்த ஜெரமி வாஷிங்டன் என்ற முப்பத்தி மூன்று வயது மனிதன், தனது வயிற்றுப்பாட்டிற்க்காக மீண்டும் கொள்ளையடிக்க முடிவு செய்தான். ஒரு பொம்மை கடையில் சென்று,சிறையில் சம்பாரித்த பணம் கொண்டு ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் கூட்டம் குறைவாக இருக்கும் மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின் மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட, ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின் கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். இதனை எதிர்பார்க்காத ஜெரமி அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான். ஆம் அவர்கள் இருவரும் நியூயார்க் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை சென்ட்ரல் பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்.

சளிபிடித்தால் சனி பிடிக்கும்.
=======================

இங்கிலாந்தில் உள்ள புர்ந்லேயில் மிச்சேல் ரொபின்சன் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார். அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த மிச்சேல் தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில் தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன் தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண, உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் மைகேல் ஆர்தர் போல்டேன்.அவனது பையினுள் மிச்சேல் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த சில இனிப்புகளும் வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான். திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்தவன் நகையையும் இனிப்பையும் மிச்செலின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். போலீசில் மாட்டிக்கொண்டான்.
----------

Friday, September 4, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 2



சில குற்றங்களை எப்படி கையாள்வது என காவல் துறை தலையை பியித்து கொள்ளும். சிலர் எதிர்பாராமல் மாட்டுவார்கள்.

அவ்வகையான சில குற்றங்களை இப்பதிவில் காணலாம். இவை முழுக்க முழுக்க உண்மையாக நடந்தது செய்தித்தாள்களில் வெளியானது.

1. நாயும் கறியும்.
===============
மசாசுசெட்ஸ் மாகனத்தின் பிர்மிங்காம் நகரில் ஒரு பாலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ஒருத்தன். கடை முதலாளியும் அந்த திருடனை பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர். மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய் திடீரென ஒரு ஆளின் கைய்யை கவ்வி இருக்கிறது. கடைக்கரரோ சரியான முட்டாள் நாயை கூட்டி வந்துவிட்டார்களே என நொந்தபடி இந்த ஆள் இல்லை வேறொருத்தன். அவன் கருப்பன்.இவனோ வெள்ளயன்.உங்கள் நாய்க்கு இது கூட தெரியவில்லை போங்கடா போங்க என சொல்லாத குறையாய் விரட்டி இருக்கிறார். இருந்தாலும் ஒரு பொறி தட்ட எட்வர்ட் பிரவுன் என்ற அந்த அந்த வெள்ளை காரனை சோதனையிட அவர் தனது ஜட்டிக்குள் 67$ பெறுமானமுள்ள பன்றிக் கறியை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய் கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!!

2. நாயினால் கடித்த வடு...
=====================
அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் இருக்கும் பாயோட்டேச்வில் என்ற நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது. என்னவென்றால் அங்குள்ள க்ளோரியா பாஸ் என்ற பெண்மணியின் மகள் மிதிவண்டியில் செல்லும்போது ஒரு நாய் துரத்துவதாக.( நம்மூரில் வண்டியில் செல்லும் ரோமியோக்களை போல அல்ல. இது நிஜமான நாய்). இதற்க்கெல்லாம் பொய் விசாரிக்க வேண்டி இருக்கிறதே என அந்த வீட்டிற்கு காரில் சென்றார் காவலதிகாரி. காரை அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தி இருக்கிறார். கதவை திறந்துள்ளார் க்ளோரியா பாஸ். அவரை தாண்டி அவரது வீட்டிலிருந்து குதித்த பாக்சர் இன நாய் பாய்ந்து சென்று காவலர் வந்த வண்டியின் அனைத்து டயர்களையும் கடித்து குதறிப்போட்டது. சும்மனாச்சுக்கும் எல்லாம் அமெரிக்காவில் நாய்களை சுட்டுவிட முடியாது. க்ளோரியா பாசினால் நாயை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்தும் முடியும் வரை காவல் அதிகாரி பார்த்துகொண்டிருந்தார். பின்னர் டயர்களை மாற்றுவதற்காக ஐந்நூறு டாலர் க்ளோரியா பாஸ்க்கு பைன் போட்டுவிட்டு வேறு காரில் ஏறி சென்றார்.

நன்றி The Examiner.

Friday, July 31, 2009

நகைச்சுவை குற்றங்கள் -1


கொலை செய்வது, திருடுவது,கற்பழிப்பது மட்டும் தான் குற்றம் என்று இல்லை. அமெரிக்க செய்தி தாள்களை பார்த்தால் சில சிரிப்பான கைதுகளும் அகப்படும். அவற்றில் சில.

மோட்டார் சேஸ்
--------------------------------
ஒரு ஞாயிற்று கிழமை.யூட்டா மாநிலத்தின் சிறு நகரொன்றில் காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள். ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக. அந்தக் காரை துரத்தியது காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம். குற்றவாளிகள் காவலரை கண்டால் மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல் வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஏழு வயது சிறுவன். சர்ச் செல்வதை தவிர்க்க தன பெற்றோரிடம் தப்பிக்கவே தான் காரை ஒட்டி சென்றதாக சொல்ல தலையை சொரிந்தது போலீஸ். அச்சிறுவன் மீது வழக்கு போடாமல் எச்சரித்து அனுப்பி விட்டது போலீஸ்.

காவல் ஹோட்டல்.
-------------------------------------
லூசியான மாநிலத்தில் மிட்செல் தேச்லட்டே என்ற இருபத்தைந்து வயது இளைஞன் ஸ்டைலாக தனது கரை பார்கிங் லாட்டில் பார்க் செய்து விட்டு ஒரு கட்டிடத்தின் கதவை தட்டி, திறந்தவரின் சீருடையை கண்டு சிரிப்பை அடக்கி கொண்டு
' ஒரு ரூம் புக் பண்ணனும் கொஞ்ச நேரத்தில் என் கேர்ள் பிரண்டை கூட்டிட்டு வரேன் ' என்று சொல்ல அவர் அவன் தலையில் தட்டி விலங்கிட்டு விட்டார். பின்னே, குடி போதையில் போலீஸ் ஸ்டேஷனை ஹோட்டல் என நினைத்து இந்ஸ்பெக்தரிடமெ ரூம் வேண்டும் என்று கேட்டால்?... அய்யா குடிபோதையில் கார் ஒட்டியதற்காக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

நன்றி: The Examiner.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...