
அதென்னவோ தெரியவில்லை, ஐ டி துறையில் வேலை பார்ப்பவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் கலாசாரத்தையே அழிக்க வந்த கிங்கரர்கள் என பலரின் மனதில் எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. எதோ டை கட்டிக் கொண்டு ஏ சி ரூமில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு, ப்லாகுகள் எழுதிக் கொண்டு, வலைத்தளங்களை மேய்ந்துகொண்டு வருவதற்கு அவர்களுக்கு லட்சம் ருபாய் சம்பளம் தருகிறது அவரது அலுவலகங்கள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை நான் சக பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், திரைப் படங்களிலும் பார்த்து அடைந்த கவலையின் விளைவே இந்த பதிவு.
சரி ஐ டி மக்களின் மேல் அப்படி என்ன இவர்களுக்கு இருக்கும் கோவம்.
1. அதிகம் சம்பாதிக்கிறார்கள்.நோகாமல் நுங்கு தின்கிறார்கள்.(அதிகம் வேலை செய்யாமல் சம்பாதிக்கிறார்கள்).
2. தண்ணி அடிக்கிறார்கள்.
3. நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
4. உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்.
5. விலைவாசியை உயர்த்துகிறார்கள்.
இந்திய பொருளாதாரம் இன்று உயர்ந்துள்ளதற்கு யார் அல்லது எது காரணம் என நினைக்கிறீர்கள்? அந்நிய செலாவணி தானே? அதனை இப்போது அதிகமாக ஈட்டிக் கொடுப்பது ஐ டி தானே. இந்தியா இன்று உலக வரைப்படத்தில் ஒரு தவிர்க்க முடியாத பங்கு சந்தையாக வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன? இந்தியா ஒளிர்கிறது மற்றும் ஜெய் ஹோ என மாறி மாறி அரசியல் கட்சிகள் தேர்தல் முழக்கம் செய்வதற்கு காரணம் என்ன? ஐ டி என்ற கணினி பொறியாளர்களால், மென்பொருட்கள் புனையப்பட்டு ஏற்றுமதி செய்யபடுவதால் தானே? அவர்கள் அதிகம் சம்பாதிக்க காரணம் என்ன? அவர்கள் புனைந்த மென்பொருட்கள் அதிகம் விலைக்கு உலக சந்தையில் விலை போவதால் தானே? சரக்குக்கு ஏற்ற கூலி. அல்லது வருமானத்துக்கு ஏற்ற கூலி.
மக்களின் வருமானம் சுழற்சி முறையில் தான் தீர்மானிக்கப் படுகிறது. முதலில் ஆடிட்டர்கள் சம்பாதித்து தீர்த்தார்கள், பின்பு வக்கீல், பின்னர் பெற்றோர்கள், தங்கள் பிள்ளை எஞ்சினியராகவோ அல்லது ஒரு டாக்டராகவோ ஆக்க ஆசைப்பட்டார்கள். அதில் வருமானமும் கௌரவமும் அதிகம் இருந்தது. இப்போது கணினி. எதிர்காலத்தில் வேறொன்று வரலாம்.
உழைப்பவர்கள் தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்பட, ஐ டி பொறியாளர்கள் தங்கள் மூளையை மூலதனமாக கொண்டு செயல்படுகிறார்கள்.
சும்மா உக்கர்ந்திருந்து பணம் சம்பாதிப்பது எந்த ஒரு தொழிலும் இயலாத காரியம்.அப்படி ஒரு நிலைமை ஐ டி கம்பெனிகளில் இருந்தது. அதை பெஞ்ச் பீரியட் என சொல்வார்கள். மாடு மாதிரி ஒரு ப்ரொஜெக்டில் உழைத்து முடித்திருப்பான்.அடுத்த ப்ராஜெக்ட் வரும்வரை அவனுக்கு சம்பளம் கொடுத்து காத்திருக்க வைப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு.ப்ராஜெக்ட் முடிந்தால் அடுத்த நாளே அவனுக்கு வேலை பொய் விடும்.
மன உளைச்சல் மன உளைச்சல் என ஒரு எழுத்தாளன் சொல்கிறான் என்றால், அதற்க்கு காரணம் அவன் எழுத்திலேயே மூழ்கி அதை பற்றியே சிந்தித்து அதிலேயே உழன்று திரிவதால் வருகிறது. ஒரு ஐ டி பொறியாளனும் அவ்வாறே. தாது ப்ரோஜெக்ட்க்கு எவ்வாறு ப்ரோகராம் எழுதினால் சரியாக வரும் என அதிலேயே உழன்று குறித்த நாட்களுக்குள் அதனை முடிக்க வேண்டும் என்ற டெட் லைனுக்காக இரவும் பகலும் பாடுபட்டு மன உளைச்சல் அடைய்கிறான். ஒரு புத்தகம் எழுதி முடித்துவிட்டு ஒரு எழுத்தாளன் அடைகிற அதேவிதமான மகிழ்வும் நிம்மதியும் ஒரு ப்ரோக்ராம் முடித்ததும் ஒரு கணிப்பொறி போறியாளனுக்கு ஏற்ப்படுகிறது. எழுத்துக்களை படைக்கு படைப்பாளியான ஒரு எழுத்தாளன் தான் படைப்பதால் கடவுள் என சொல்லிக் கொண்டால், ஒரு ப்ரோக்ராமை படைக்கும் ஒரு கணினி பொறியாளனும் கடவுள் தானே.
தனது மன உளைச்சலை ஒரு எழுத்தாளன் கஞ்சா அல்லது தண்ணி என தீர்த்துக் கொள்கிறான். தனது கணினி பொறியாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களே தண்ணி வாங்கி தருகிறது. இது ஒரு உருவகம் மட்டுமே அனைத்து கம்பனிகளும் தனது தொழிலாளர்களுக்கு தண்ணி வாங்கி கொடுப்பது இல்லை. அனைத்து கணினி பொறியாளர்களும் தண்ணி அடிப்பதும் இல்லை. ப்ராஜெக்ட் முடிந்த பார்ட்டி என்றால் தண்ணி பார்ட்டி சில பெரிய கம்பனிகளில் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அது ஐ டி கம்பெனிகளில் மட்டும் என்று இல்லை. ஐ டி அல்லாத கம்பெனிகளிலும் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஐ டி மக்களை மட்டும் இந்த அளவிற்கு மட்டம் தட்டுவது ஏன்? அவர்கள் அதிகம் சம்பாதிப்பது தான் இவர்களை உறுத்துகிறதோ?
கலாசாரம் என்றால் என்ன? ஐ டி தொழில் வருவதற்கு முன்னர் கலாசாரம் எப்படி இருந்தது இப்போது சீரழிந்து போவதற்கு. எப்போது கேபிள் டி வீ நமது வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்ததோ அப்போதே நமது காலாசாரம் சீர்கெட ஆரம்பித்து விட்டது. இன்று கல்லூரிகளிலேயே பல அத்துமீறல்கள் நடக்கின்றன. இன்று செய்தி தாள்களை பிரித்தால் தினந்தோறும் கள்ளக் காதல் கொலைகள்... அவர்கள் எல்லோரும் ஐ டீயில் வேலை பார்பவர்களா?. ஐ டீயில் உள்ள பெண்கள் தண்ணி அடிக்கிறார்கள் என்பது ஒரு குற்றசாட்டு. மலம் அல்லும் தொழிலாளிகளும் சித்தாள் வேலை பார்ப்பவர்களும் தான் தண்ணி அடிக்கிறார்கள். அதற்காக நான் அதனை ஞாயப் படுத்தவில்லை. அதற்க்கு ஒரு காரணம் இருக்கிற்து.
ஐ டி கம்பெனிகள் உருவாக துவங்கியதும், உலகமயமாக்கள் துவங்கிவிட்டது. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் உள்ள கம்பெனிகளிலும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள கம்பெனிகளிலும் வேலைக்கு சேர்வது சகஜமானது. வடக்கில் உள்ள பல பெண்கள் தண்ணி அடிப்பதும் சேர்ந்து வாழ்வதும் சகஜமானது. அவர்கள் தெற்கிலும் வந்து அதையே தொடர்ந்தால் கலாசாரம் கேட்டுவிட்டது என ஒட்டுமொத்த ஐ டி மக்கள் அனைவரையும் சாடுவது எந்த விதத்தில் ஞாயம். நிச்சயமாக கலாசார அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.
ஆனால் அது எல்லா துறைகளிலும் உண்டு. எப்படி ஒரு நடிகை காதலித்தால் அது பூதாகாரமாக பார்க்கப்பட்டு செய்தி ஆகிறதோ அதே போல் தான் ஐ டி மக்களின் நிலைமையும். ஒரு முஸ்லிம் தீவிரவாதி குண்டு வைப்பதால், அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதே அளவு முட்டாள் தனமானது தான் ஒரு சில ஐ டி மக்களின் நடவடிக்கைகளை பார்த்து அனைத்து ஐ டி மக்களும் அப்படி தான் இருப்பார்கள் என முடிவு செய்வது.
உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வது நமது தாத்தா காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. நமது தாத்தா காலத்தில் ரங்கூன் சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். நமது அப்பா காலத்தில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த எல்லைகள் விரிந்து அமெரிக்கா ஐரோப்பா என்று உலகெங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.
இன்றைய மத்தியதர மக்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பதற்கு காரணம் ஐ டி துறையே என்பதை மத்தியதர மக்கள் சொல்வார்கள். இது நாள் வரை விமானங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் இன்று அதில் ஏறி பயணித்து உலகம் சுற்றும் வாய்ப்பு அவர்களது ஐ டி துறை சார்ந்த மகனாலோ அல்லது மகளாலோ என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.
எனக்கு தெரிந்த நண்பர் சொன்னார். தனக்கு பத்தாவது படிக்கும் வயதில் இருந்து அமெரிக்க சென்று வாழவேண்டும் என்ற எண்ணம் என்று. இவரைப் போல சிலரை தவிர அமெரிக்காவிலோ அல்லது இங்க்லாந்திலோ உள்ள பல இந்தியர்களின் கனவு, நன்று சம்பாதித்து விட்டு இந்தியாவில் ஒரு வீடு வாங்கி வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே.
இந்தியாவில் வேலை செய்தாலும், அயல் நாட்டில் வேலை செய்தாலும் வேலை செய்வதென்னவோ அயல் நாட்டின் ப்ரோஜெக்ட்களுக்காக தானே. இந்தியர்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிடுகிறதா என்ன? இதில் அயல் நாடு சென்று வேலை செய்தால் என்ன இந்தியாவில் இருந்து வேலை செய்தால் என்ன? ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்க வேண்டும் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்பது தானே. வைப்புள்ளவன் சம்பாதித்துக் கொள்கிறான். வாய்ப்பில்லாதவன் பழி போடுகிறான்.
சனல் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முன்னணி வகிக்கிறது. கணிப்பொருள் ஏற்றுமதியும் அவ்வாறுதானே. பொருள் மட்டும் தானே வேறு. பின் எப்படி ஐ டி மக்கள் மட்டும் அந்நிய நாட்டுக்கு சோரம் போவதாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்?
விலைவாசியின் ஏற்றத்துக்கு காரணம் அரசியல் வாதிகளின் திட்டங்கள் மட்டுமே. வீடு வாங்குவதிலும் மனைகள் வாங்குவதிலும் சரியான திட்டங்கள் இல்லாமையே வீடு விலை உயர்வுக்கு காரணம். விலை ஏற்றத்திற்கு சரியான நிர்ணயம் இல்லாமையே வீடுகளின் உயர்வுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.
நிற்க...
பணத்தை அள்ளிக் கொடுப்பதால், பணத்தின் மதிப்பு ஐ டி மக்களிடையே குறைந்து வருத்வது தெளிவாகிறது. எதிர்காலத்துக்கு சிறிதும் சேமிக்காமல், இருக்கும் காசை செலவு செய்ய துடிக்கும் இளைய சமுதாயத்தில் சிலர் பார்ட்டி கல்செரில் சிக்கி அல்லாடுவது தெரிகிறது.
மற்றும் வேறு ஊர்களில் வந்து வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கையில் காசு இருக்கும் சுதந்திரத்தால், யார் நம்மை பார்க்க அல்லது கேட்க போகிறார்கள் என்ற நினைவில் லிவிங் டுகெதர் என்ற சேர்ந்து வாழும் கலாசாரம் தனி மனித ஒழுக்கத்தை சீரழித்து வருகிறது.
இதனையே சமூகம் கலாசாரம் கேட்டுவிட்டது என கூப்பாடு போடுகிறது. வாழ்க்கையில மன உளைச்சலை தீர்க்க எவ்வளவோ வழிகள் உண்டு. மதுவிலும் மாதுவிலும் மட்டும் மன அமைதி தேடுவது வாழ்கையை சின்னாபின்னமாக்கிப் போடும்.
எதிலும் ஒரு அளவு வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். மேலும் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல ப்ரோஜெக்ட்களும் டெட் லைன்களும் குடும்பங்களின் மேல் உள்ள கவனத்தை குறைப்பதால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் டே கேர் களிலும் வளர வேண்டிய சூழல் வரலாம். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கென்று குறித்த நேரம் ஒதுக்க வேண்டும். ப்ராஜெக்ட் இல்லையென்றால் அடுத்த நாளே வேலையே விட்டு உங்கள் கம்பெனி தூக்கி விடலாம். உங்கள் குடும்பம் மட்டுமே கடைசி வரும் உங்கள் கூட வரும். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் நேரம் குடும்பம் உங்களுடன் இருக்காது.
இது மற்ற வேலைகளிலும் உண்டு என்றாலும், அதற்கும் இந்த சமூகம் ஐ டி மக்கள் மேல் தான் பழி போடும்.
-----------------------------------------