Friday, March 4, 2011

நகைச்சுவைக் குற்றங்கள்...

 
 
உலகத்தில் பல்வகை குற்றவாளிகள் இருக்கிறார்கள். கொடூரமானவர்கள், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் குற்றம் செய்பவர்கள், வஞ்சம் தீர்ப்பவர்கள் என. சில குற்றவாளிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து மாட்டிக் கொள்வார்கள். சிலசமயம் இவர்களின் குற்றங்கள் நகைப்புக்கு உரியதாகப் போய்விடுகிறது. அவ்வகை குற்றங்களை நாம் நகைச்சுவைக் குற்றங்களாக பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் நடந்த இரண்டு நகைச்சுவை குற்றங்களை இப்போது பார்க்கலாம்.
1. ஆம்புலன்ஸ் திருட்டு.
அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தின் லாரன்ஸ் நகரில், ஜாகப் என்பவன் ஒரு வார நாள் இறுதியில் தனது உத்தியோக உயர்வை முன்னிட்டு ஒரு பாரில் சகட்டு மேனிக்கு குடித்திருக்கிறான்.நள்ளிரவை தாண்டிய பொழுதில், பார் மூடும் நேரம் வெளிவந்து பார்க்க டாக்சிகள் எதுவும் கிடைக்காமல் வீட்டுக்கு எப்படி திரும்ப என யோசித்தவன், அருகே விளக்குடன் ஒரு எமர்ஜென்சிக்காக  நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வான் டிரைவரை மண்டையில் தான் குடித்த பீர் பாட்டிலால் அடித்து,  ஆம்புலன்சை கடத்திக்கொண்டு, குடி போதையிலேயே வீடு சென்ற ஜாகப், ஆம்புலன்ஸ் விளக்குகள் சுழலவிட்டவாறே, வீடு சென்று உறங்கிப் போனான். சிறிது நேரத்தில் வந்து போலீஸ் கை விலங்கிட்டபோது போதை தெளிந்தவன் ,  தன் வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் எதற்கு நிற்கிறது என போலீசிடம் கேட்டுள்ளான். அவனது உத்தியோகம் பறிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் திருடியது, குடிபோதையில் வண்டி ஒட்டியது மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது என குற்றங்கள் அவன் மேல் பதிவு செய்யப்பட்டு அய்யா இப்போது சிறையில்.

2. பிஞ்சு மனங்களில் நஞ்சு.
ப்ளோரிடா மாகணத்தில் உள்ள ஒரு நகரில், தனது பிள்ளைகளை பள்ளியில் விடப்போன தாய் சூசனுக்கு மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அணிந்து வந்த குறைந்த ஆடைகள்  கண்டு கடுப்பு. பள்ளியில் நடந்த பெற்றோர் பிள்ளைகள் மீட்டிங்கில், பள்ளியின் முதல்வரிடம் இதை பற்றி சொல்லி, பிள்ளைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் அப்படி குறைவான உடையிலும் லோ நெக் ப்ளவ்ஸ்களும் அணிந்து வந்தால் பிஞ்சுகளின் மனங்களில் நஞ்சு விதைக்க ஆளாக நேரும் என்பதால் அத்தகைய உடைகளை தடை செய்ய வேண்டும் என கேட்டார். முதல்வரோ, கூலாக, இது ப்ளோரிடா மாகாணம். இங்கு சூடு மிக அதிகம் எனவே அவர்களுக்கு வசதியான ஆடைகளை அணிகிறார்கள். அதை எல்லாம் தடை செய்ய முடியாது என கூற. மேலும் மேலும் வாக்குவாதம் முற்ற, 'ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்தால் மட்டுமே தடை கோர முடியும் என சொல்ல' ஆத்திரம் அடைந்த அந்த தாய், 'அப்படியானால் இப்படி வந்தால் மட்டும் ஆபாசம் என கூறுவீர்களா என சட்டென தனது ப்ளவ்ஸ் உள்ளே இருந்து, வெளியே எடுத்தது போட, முதல்வர் (உள்ளே இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் (!) ) கோவம் அடைந்தார். மேலும் அவரை கொவமஅடைய வைக்க, இரண்டையும்(எதை என்பதை சொல்ல தேவை இல்லை ) சேர்த்து வைத்து ... இப்படி இருந்தால் ஆபாசம் என சொல்வீர்களா ' என கத்த, இப்போது அந்த தாய் இண்டீஜெண்டாக பிகேவ் செய்ததற்காக அபராதம் விதிக்கப் பட்டு மூன்று மாதம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...