Wednesday, September 25, 2013

அன்னயும் ரசூலும் (மலையாளம்)





ஒரு புல்லாங்குழலின் இசை போல மெலிதாக இதயம் எங்கும் வருடிப் போகிறது அன்னாவுக்கும் ரசூலுக்குமான காதல். மெழுகுவர்த்தியின் ஒளியில் அன்னாவின் அழகு முகத்தை காண்பதில் துவங்குகிறது ரசூலுக்கு அன்னாவின் மேல் உள்ள காதல்.




கொச்சின் நகர பின்னணியில் நதியில் பயணிக்கும் படகில் தொடரும் காதலின் முடிவு யூகிக்க கூடியது தான் என்றாலும், நம்மருகே நடக்கும் சம்பவங்களைப் போல காட்சிகளை கோர்த்தது திரைக்கதையின் வெற்றி. இமேஜ் பற்றிய வரை முறைகளை தகர்த்தெறிந்துவிட்டு வேறுபட்ட பாத்திரங்களை தேடி சென்று நடிக்கும் பகாத் பாசிலின் உடல் மொழியும் மிகை இல்லாத நடிப்பும் ரசூலை நமது வாழ்கையின் அருகே கொண்டு நிறுத்துகிறது.



அன்னாவாக ஆண்ட்ரியா... இவருக்கு வசனங்களே இல்லை. அதனாலென்ன..பக்கம் பக்கமான வசனங்களை இவரது விழிகளே பேசி விடுகிறது.



சம்பவங்கள் நடக்கும் இடத்திற்கு தேவையான ஒளி கொடுத்து காட்சி படுத்தி இருக்கும் விதம், படத்திற்கு ஒரு ஓவிய வடிவத்தை கொடுக்கிறது. படத்திற்கு பெரும் பலம் மது நீலகண்டனின் ஓளிப்பதிவு.



இயற்க்கைக்கு முரணில்லாத காட்சிகள் அமைத்ததற்கு இயக்குனர் ராஜீவ் ரவிக்கு வாழ்த்துக்கள்.



அன்னையும் ரசூலும்.. கவிதை. 



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...