(எனது முதல் பதிவு மீண்டும் மீள் பதிவாக...)
http://www.savetnfisherman.org/
அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.
உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.
உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்
கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.
எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.
நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.
நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.
இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...
நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?
அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..
- நிலா முகிலன்
http://www.savetnfisherman.org/
அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.
உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.
உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்
கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.
எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.
நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.
நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.
இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...
நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?
அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..
- நிலா முகிலன்
-புகைப்படம் -நிர்மல்