Tuesday, September 29, 2009
வீரப்பெண் ருக்க்ஷானா
என்னவென்று சொல்வது... புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் என்ற காலம் பொய், பயங்கரவாதியை துப்பாக்கியால் கொன்று மீதமுள்ள பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டிய காஷ்மீரிப் பெண் என்று காலம் வெகுவாக முன்னேறிவிட்டது.
செய்தியை படித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. அந்த பெண் இருக்கும் திசை நோக்கி கைகள் கூப்பி நின்றது. அவளது வீரம் நிச்சயமாக வணக்கத்திற்க்குரியது.
காஷ்மீர் மாநிலத்தில் 27 செப்டம்பர் இரவு ஒன்பதரை மணியளவில் ஜம்முவின் ரசூரி மாவட்டத்தில் உள்ள கிராமமான தனமண்டி கிராமத்தின் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியில் மூன்று தீவிரவாதிகள், ஏ கே ரக ஆயுதங்களுடன், ருக்க்ஷானாவை வீட்டின் வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டது அவர்கள் குரல். ருக்ஷானாவின் பெற்றோர் அவளை மறைத்து வைத்துவிட்டு அவர்களுடன் அனுப்ப மறுக்க, அவர்களை தாக ஆரம்பித்தனர் தீவிரவாதிகள். ருக்ஷானாவின் தம்பி தங்கள் பெற்றோரை காக அவர்களை நோக்கி ஒரு கோடாலி எடுத்து வீச தடுமாறி விழுந்த தீவிரவாதியின் ஏ கே ரக துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி சுட்டாள் ருக்க்ஷானா. அங்கு வந்த குழுவின் தலைவனான அவன் அதே இடத்தில் மாண்டு போனான். எஞ்சி இருந்தவர்களை நோக்கி சுட்டு அவர்களை காயமுற செய்து அவர்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட ஓட விரட்டி உள்ளனர், ருக்ஷனாவும் அவளது குடும்பத்தினரும். இறந்து போன தீவிரவாதி லஸ்கர் எ தோய்பா குழுவை சேர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த உஸப்ப ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிராம பாதுகாப்பு குழு தந்த பயிற்சியே தனக்கு துப்பாக்கியை இயக்க மிகவும் உதவியது என கூறி இருக்கிறார் ருக்ஷானா. அவருக்கும் அவரது தம்பிக்கும் அவர்களது தைரியத்தை மெச்சி போலீஸ் வேலை தர உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாம். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளதாம். இது போதாது . தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டி மற்ற காஷ்மீரி மக்களுக்கு, உதாரண பெண்மணியான ருக்ஷனாவுக்கு மேலும் விருதுகள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் மற்ற மக்களுக்கும் கிராம பாதுகாப்பு குழுவின் பயிற்ச்சி அவசியம். மக்கள் வெகுண்டெழுந்தால், தீவிரவாதம் தலை தூக்காது. ஏன் எந்த எதிரி நாடும் நம்மிடையே வாலாட்ட துணியாது.
பயங்கரவாதிகளை கண்டு நடுங்கும் நமக்கு முன்னால் ஒரு உதாரண பெண்மணியாக, தைரிய லட்சுமியாக விளங்கும் ருக்ஷானாவையும் அவளது குடும்பத்தையும் இருகரம் குவித்து வாழ்த்தி வணங்குகிறேன்.
-----
Tuesday, September 15, 2009
ஒரு தாயின் தாகம்!
குழந்தை பிறந்தால் போதும்.நமது பெண்களுக்கு கவனம் எல்லாம் குழந்தையின் மீது. தங்களது கடந்தகால சாதனைகளை மறந்து விடுவார்கள். உடல் மேல் அக்கறை இல்லாமல் பெருத்து விடுவார்கள். தாங்கள் பெரிய நடன கலைஞராக இருப்பார்கள். பெரிய விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்கள். அலுவலகங்களில் மேலதிகாரியாக இருப்பார்கள்.ஆனால் குழந்தை பிறந்ததும் அனைத்தும் குழந்தைக்காக என தங்களது வாழ்கையை, சிந்தனையை அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.அத்துடன் அவர்களது லட்சியம் எல்லாம் தொலைந்து விடும்.
2005 இல யு எஸ் ஓபன் சாம்பியன். உலக டென்னிஸ் தரப்பட்டியலில் முதலிடம் என இருந்த பெல்ஜியத்தின் கிம் க்ளைட்ஜெர் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக டென்னிஸ் இலிருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 2007 இல் அமெரிக்காவின் கூடைபந்து வீரரான ப்ரியன் லிஞ்சை மனம் முடித்த கிம் 2008 பிப்ரவரியில் ஜடா எல்லீ என்ற பெண் பெற்றெடுத்தார்.
மணக்கோலத்தில் கிம்.
டென்னிஸ் விளையாட்டின் மேல் உள்ள காதலும், மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உந்தி தள்ள, தன கணவனின் ஊக்குவிப்புடன் மீண்டும் டென்னில் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பித்தார். ஜனவரி 2009 இல் தனது தந்தையை இழந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு வெறியுடன் போராடினார். தரபட்டியலில் இல்லாத ஒரு வீராங்கனையான கிம் கிளைட்ஜெர்ஸ் நிச்சயம் இறுதி போட்டி வரை தாக்குபிடிக்க கூடும் என்றே டென்னிஸ் வல்லுனர்கள் யாரும் நினைக்க வில்லை.
டென்னிசில் அசைக்க முடியாத சக்தியான வில்லியம்ஸ் சகோதரிகள் நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் தரப் பட்டியலில் பத்தாவதாக இருந்த டென்மார்க்கை சேர்ந்த வோஜ்நியாகியை புலி போல எதிர் கொண்டார்.ஆடுகளத்தின் ஓரங்களுக்கு ஓடி ஓடி இவர் பந்தெடுத்து அடித்து ஆடிய விதம் வோஜ்நிஆகியை திண்டாட செய்தது. கிம்மின் புலி பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பதினேழு வயதான வோஜ்நியாகி அந்த இருபத்தி ஆறு வயது தாயிடம் தோற்றுப் போனார்.
ஜடா மற்றும் வெற்றிக் கோப்பையுடன் கிம்.
அந்த முழு போட்டியையும் தனது கணவன் மற்றும் தன் குழந்தையும் பார்க்கதான் ஆடி வெற்றி கொண்டார். போட்டியின் வெற்றி கோப்பையை அவர் கையில் வாங்கும்போது தனது குழந்தை ஜடாவையும் அழைத்து அந்த கோப்பையை அவளிடம் கொடுத்து அக்குழந்தை அந்த கோப்பையை வைத்து விளையாடியது ரசிக்கத்தகுந்த காட்சி.
இறுதியில் அவர் தொலைக்காட்சி நிருபருக்கு பதில் அளிக்கையில் அவர் கூறியது.....
'என் குழந்தை ஜடாவுடன் நான் முழுக்க நேரம் செலவு செய்து நாட்காளாகிவிட்டது.இனி வரும் சில மாதங்கள் எனது நேரம் அவளுக்கும் எனது கணவனுக்கும் மட்டும் தான்.'
சாதனைகள் செய்யத்துடிக்கும் தாய்மார்களுக்கு கிம் கிளைட்ஜெர்ஸ் ஒரு முன்னோடி.
வாழ்த்துக்கள் கிம்!
-----------
Friday, September 11, 2009
உலக சினிமா: பிஹைன்ட் தி சன் (Behind the sun)
பிரேசில் இயக்குனரான வால்டேர் செலஸ் எனது அபிமான இயக்குனர்களில் ஒருவர். அவருடைய சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற அதி அற்புதமான திரைப்படத்தை பார்த்ததில் இருந்து நான் அவரது ரசிகனாகிவிட்டேன். ( அந்த திரைப்படத்தை பற்றி விரைவில் பதிய இருக்கிறேன்.). அவரது படங்களை தேடித் பார்க்கும் ஆர்வத்தை அந்த திரைப்படம் தான் என்னை வளர்த்துவிட்டது. அவ்வாறு தேடியதில் கிடைத்தது தான் இந்த திரைப்படம். இஸ்பானிய மொழியில் இந்த திரைப்படம் இருந்தாலும் கலைக்கு மொழி இல்லையே!.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ரோடு மற்றும் மின்சாரம் இல்லாத கிராமம் அது. கரும்பை விளைவித்து அதிலிருந்து வெள்ளம் தயாரிக்கும் குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பத்துக்கும் உள்ள நில தகராறு தான் கதையின் மய்யப் பிரச்சினை. பக்கு என்ற சிறுவன் தான் படத்தின் மய்யப் புள்ளி.
பரம்பரை நில தகராறில் இரு குடும்பங்களுக்கும் பெரும் இழப்புகள். தன் அண்ணனை கொல்கையில் அவரது சட்டையில் இருக்கும் ரத்தக்கறை, சூரிய சூட்டில் மஞ்சள் ஆகும்வரை காத்திருந்து, பழி வாங்க புறப்படுகிறான் டோனியோ. தனக்கு வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப பாரம்பரிய கவுரவத்தை காக்க அவன் அந்த எதிரி குடும்பத்தின் மூத்த மகனை கொன்றே ஆகவேண்டும். அதன்படியே செய்துவிட்டு அந்த குடும்பத்தின் மூத்தவரான கண் தெரியாதவரின் அருகே தன் தந்தையுடன் சென்று ஆறுதல் சொல்லி, இத்துடன் முடித்து கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவரோ அவனது கையில் மரணக் கயிற்றை கட்டி, தன் மகனின் ரத்தம் சூட்டில் மஞ்சளாகும்வரை மட்டுமே அவனுக்கு நேரமிருக்கிறது என்றும், அடுத்த பௌர்நமியில் அவனது உயிர் அவனது உடலில் இருக்காது என்றும் கூறி அவனை அனுப்பி விடுகிறார்.( கொல்வதில் கூட ஒரு ஞாயம்.). அண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறான் சிறுவன் பக்கு. அண்ணன் வந்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். அவனது அன்னைக்கும் தான். எனினும் அவனது தந்தை டோனயோ அடுத்த பௌர்நமியில் பழி வாங்கப் படுவான் என சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி வடிகிறது. வழக்கம் போல அடங்கிப் போகும் அம்மா.
அவர்கள் ஊருக்கு வித்தை காட்ட வரும் கிளாரா மற்றும் சலுச்டிநோவால் அவர்கள் வாழ்கை புரட்டிப் போட படுகிறது. கிளாரா பக்குவிர்க்கு ஒரு புத்தகம் பரிசளிக்க, படிக்க தெரியாத பக்கு அந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே கதையை புனைந்து தனக்கு தானே கதை சொல்லிகொள்கிறான். அந்த புத்தகத்தில் இருக்கும் கடல் தேவதையாக கிளாரவை உருவகப்படுத்திக் கொள்கிறான். வெல்லம் விற்க நகரத்திற்கு செல்லும் டோனயோ கிளாரவை கண்டு காதல் கொள்ள, அவர்களது வித்தையை பார்க்க ஆவலாய் உள்ள சிறுவன் பக்குவை இரவு அப்பாவிற்கு தெரியாமல் கூட்டி சென்று காட்டி பக்குவை மகிழ்விக்கிறான். இதன் மூலம் தனது தந்தையின் கௌரவ பறம்பார்யாத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதற்க்கு பக்கு உடந்தையாய் இருக்கிறான். பக்குவிற்கு தனது சகோதரன் டோனயோ மேல் உயிர்.
புத்தகத்தின் படி கடல் தேவதையும் கதாநாயகனும் கடலில் சென்று மகிழ்வாய் வாழ்வதாய் கதை முடிகிறது. பக்கு அந்த கதாநாயகனாய் டோநியோவையும் கடல் தேவதையாய் கிளாராவையும் உருவாக படுத்தி பார்க்கிறான். எனினும் வழமை போல டோனயோ மறு பௌர்ணமிக்குள் கொல்லப்பட்டால் கதை முட்ட்ருபெறாது என உணர்ந்து அடுத்த பௌர்ணமையில் கிளாராவும் டோநியோவும் தனிமையில் லயித்து இருக்க, மழை பொழிய டோநியோவின் உடைகளையும் தொப்பியும் போட்டுக் கொண்டு டோநியோவை கொல்ல வரும் எதிரி குடும்பத்தின் வாரிசுக்குத் தானே டோனியோ என காட்டி கொல்லப்பட்டு இறந்து போகிறான். பக்குவின் தாய் தந்தையர் கதறி அழ,பக்குவின் ஆசைப்படி டோனயோ தன் குடும்பத்தை விட்டு பாரம்பரிய பழிவாங்கலை விட்டுவிட்டு கடற்கரை சென்று கிளாராவிற்காக காத்திருப்பதாக படம் முடிகிறது.
படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல படம் பிடித்திருக்கும் வால்டேர் கார்வலோ வின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் அள்ளிக் கொண்டு போகிறது. பதின் வயது சிறுவனாக நடித்திருக்கும் பக்குவின் நடிப்பும் அபாரம்.
ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்து வன்முறைக்கெதிராக இப்படத்தை செதுக்கி இருக்கிறார் வால்டேர் செலஸ்.
2001 இல் வெளியான இப்படம் கோல்டன் க்ளோப் பரிந்துரை உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது.
-----------
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ரோடு மற்றும் மின்சாரம் இல்லாத கிராமம் அது. கரும்பை விளைவித்து அதிலிருந்து வெள்ளம் தயாரிக்கும் குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பத்துக்கும் உள்ள நில தகராறு தான் கதையின் மய்யப் பிரச்சினை. பக்கு என்ற சிறுவன் தான் படத்தின் மய்யப் புள்ளி.
பரம்பரை நில தகராறில் இரு குடும்பங்களுக்கும் பெரும் இழப்புகள். தன் அண்ணனை கொல்கையில் அவரது சட்டையில் இருக்கும் ரத்தக்கறை, சூரிய சூட்டில் மஞ்சள் ஆகும்வரை காத்திருந்து, பழி வாங்க புறப்படுகிறான் டோனியோ. தனக்கு வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப பாரம்பரிய கவுரவத்தை காக்க அவன் அந்த எதிரி குடும்பத்தின் மூத்த மகனை கொன்றே ஆகவேண்டும். அதன்படியே செய்துவிட்டு அந்த குடும்பத்தின் மூத்தவரான கண் தெரியாதவரின் அருகே தன் தந்தையுடன் சென்று ஆறுதல் சொல்லி, இத்துடன் முடித்து கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவரோ அவனது கையில் மரணக் கயிற்றை கட்டி, தன் மகனின் ரத்தம் சூட்டில் மஞ்சளாகும்வரை மட்டுமே அவனுக்கு நேரமிருக்கிறது என்றும், அடுத்த பௌர்நமியில் அவனது உயிர் அவனது உடலில் இருக்காது என்றும் கூறி அவனை அனுப்பி விடுகிறார்.( கொல்வதில் கூட ஒரு ஞாயம்.). அண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறான் சிறுவன் பக்கு. அண்ணன் வந்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். அவனது அன்னைக்கும் தான். எனினும் அவனது தந்தை டோனயோ அடுத்த பௌர்நமியில் பழி வாங்கப் படுவான் என சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி வடிகிறது. வழக்கம் போல அடங்கிப் போகும் அம்மா.
அவர்கள் ஊருக்கு வித்தை காட்ட வரும் கிளாரா மற்றும் சலுச்டிநோவால் அவர்கள் வாழ்கை புரட்டிப் போட படுகிறது. கிளாரா பக்குவிர்க்கு ஒரு புத்தகம் பரிசளிக்க, படிக்க தெரியாத பக்கு அந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே கதையை புனைந்து தனக்கு தானே கதை சொல்லிகொள்கிறான். அந்த புத்தகத்தில் இருக்கும் கடல் தேவதையாக கிளாரவை உருவகப்படுத்திக் கொள்கிறான். வெல்லம் விற்க நகரத்திற்கு செல்லும் டோனயோ கிளாரவை கண்டு காதல் கொள்ள, அவர்களது வித்தையை பார்க்க ஆவலாய் உள்ள சிறுவன் பக்குவை இரவு அப்பாவிற்கு தெரியாமல் கூட்டி சென்று காட்டி பக்குவை மகிழ்விக்கிறான். இதன் மூலம் தனது தந்தையின் கௌரவ பறம்பார்யாத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதற்க்கு பக்கு உடந்தையாய் இருக்கிறான். பக்குவிற்கு தனது சகோதரன் டோனயோ மேல் உயிர்.
புத்தகத்தின் படி கடல் தேவதையும் கதாநாயகனும் கடலில் சென்று மகிழ்வாய் வாழ்வதாய் கதை முடிகிறது. பக்கு அந்த கதாநாயகனாய் டோநியோவையும் கடல் தேவதையாய் கிளாராவையும் உருவாக படுத்தி பார்க்கிறான். எனினும் வழமை போல டோனயோ மறு பௌர்ணமிக்குள் கொல்லப்பட்டால் கதை முட்ட்ருபெறாது என உணர்ந்து அடுத்த பௌர்ணமையில் கிளாராவும் டோநியோவும் தனிமையில் லயித்து இருக்க, மழை பொழிய டோநியோவின் உடைகளையும் தொப்பியும் போட்டுக் கொண்டு டோநியோவை கொல்ல வரும் எதிரி குடும்பத்தின் வாரிசுக்குத் தானே டோனியோ என காட்டி கொல்லப்பட்டு இறந்து போகிறான். பக்குவின் தாய் தந்தையர் கதறி அழ,பக்குவின் ஆசைப்படி டோனயோ தன் குடும்பத்தை விட்டு பாரம்பரிய பழிவாங்கலை விட்டுவிட்டு கடற்கரை சென்று கிளாராவிற்காக காத்திருப்பதாக படம் முடிகிறது.
படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல படம் பிடித்திருக்கும் வால்டேர் கார்வலோ வின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் அள்ளிக் கொண்டு போகிறது. பதின் வயது சிறுவனாக நடித்திருக்கும் பக்குவின் நடிப்பும் அபாரம்.
ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்து வன்முறைக்கெதிராக இப்படத்தை செதுக்கி இருக்கிறார் வால்டேர் செலஸ்.
2001 இல் வெளியான இப்படம் கோல்டன் க்ளோப் பரிந்துரை உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது.
-----------
Friday, September 4, 2009
நகைச்சுவை குற்றங்கள் - 2
சில குற்றங்களை எப்படி கையாள்வது என காவல் துறை தலையை பியித்து கொள்ளும். சிலர் எதிர்பாராமல் மாட்டுவார்கள்.
அவ்வகையான சில குற்றங்களை இப்பதிவில் காணலாம். இவை முழுக்க முழுக்க உண்மையாக நடந்தது செய்தித்தாள்களில் வெளியானது.
1. நாயும் கறியும்.
===============
மசாசுசெட்ஸ் மாகனத்தின் பிர்மிங்காம் நகரில் ஒரு பாலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ஒருத்தன். கடை முதலாளியும் அந்த திருடனை பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர். மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய் திடீரென ஒரு ஆளின் கைய்யை கவ்வி இருக்கிறது. கடைக்கரரோ சரியான முட்டாள் நாயை கூட்டி வந்துவிட்டார்களே என நொந்தபடி இந்த ஆள் இல்லை வேறொருத்தன். அவன் கருப்பன்.இவனோ வெள்ளயன்.உங்கள் நாய்க்கு இது கூட தெரியவில்லை போங்கடா போங்க என சொல்லாத குறையாய் விரட்டி இருக்கிறார். இருந்தாலும் ஒரு பொறி தட்ட எட்வர்ட் பிரவுன் என்ற அந்த அந்த வெள்ளை காரனை சோதனையிட அவர் தனது ஜட்டிக்குள் 67$ பெறுமானமுள்ள பன்றிக் கறியை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய் கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!!
2. நாயினால் கடித்த வடு...
=====================
அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் இருக்கும் பாயோட்டேச்வில் என்ற நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது. என்னவென்றால் அங்குள்ள க்ளோரியா பாஸ் என்ற பெண்மணியின் மகள் மிதிவண்டியில் செல்லும்போது ஒரு நாய் துரத்துவதாக.( நம்மூரில் வண்டியில் செல்லும் ரோமியோக்களை போல அல்ல. இது நிஜமான நாய்). இதற்க்கெல்லாம் பொய் விசாரிக்க வேண்டி இருக்கிறதே என அந்த வீட்டிற்கு காரில் சென்றார் காவலதிகாரி. காரை அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தி இருக்கிறார். கதவை திறந்துள்ளார் க்ளோரியா பாஸ். அவரை தாண்டி அவரது வீட்டிலிருந்து குதித்த பாக்சர் இன நாய் பாய்ந்து சென்று காவலர் வந்த வண்டியின் அனைத்து டயர்களையும் கடித்து குதறிப்போட்டது. சும்மனாச்சுக்கும் எல்லாம் அமெரிக்காவில் நாய்களை சுட்டுவிட முடியாது. க்ளோரியா பாசினால் நாயை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்தும் முடியும் வரை காவல் அதிகாரி பார்த்துகொண்டிருந்தார். பின்னர் டயர்களை மாற்றுவதற்காக ஐந்நூறு டாலர் க்ளோரியா பாஸ்க்கு பைன் போட்டுவிட்டு வேறு காரில் ஏறி சென்றார்.
நன்றி The Examiner.
Subscribe to:
Posts (Atom)