Saturday, June 27, 2009

வானமே எல்லை - மைகேல் ஜாக்சன்


Well they say the skys the limit And to me thats really true But my friend you have seen nothing Just wait til I get through . . . -Michel Jackson.

அவர்கள் சொல்வார்கள், வானமே எல்லை என என்னை பொறுத்தவரை அது சரிதான். ஆனால் நண்பனே நீ இதுவரை எதுவும் கண்டதில்லை. நான் அதை நிறைவேற்றும் வரை காத்திரு.... -மைகேல் ஜாக்சன்.

பாப் இசையின் அரசன் (King of POP) என அழைக்கப்பட்ட இசை மற்றும் நடனத்தில் வரலாறு படைத்த மைகேல் ஜாக்சன் இன்று நமக்கு வரலாறாகி போனார். உலக உருண்டையை தன் இசையால் கட்டி போட்ட கயிறு இன்று நைந்து தனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டது.

மைகேல் ஜாக்சன் என்ற அந்த மனிதனின் பெயரை கேட்டாலே இளசுகளின் நாடி நரம்புகளில் சூடேறும். கை கால்கள் தானாக நிலவு நடை (moon walk) பயிலும். இசை கண்கள் ஆங்காங்கே திறந்து கொள்ளும். ஒல்லியான தேகம். சற்றே பெண்மை கலந்த மெழுகு முகம். கழுத்து வரை புரளும் கூந்தல், முக்கால் பான்ட் அதற்க்கு மேல் வெள்ளை சாக்ஸ் பின்னர் கருப்பு ஷூ தலையில் ஒரு கவ்பாய் தொப்பி. பெண்மையான குரல். இதுவே இளைஞர்களின் இசை நரம்பாக துடித்த மைகேல் ஜாக்சன்.

எனது கல்லூரி காலங்களில் தான் ஜாக்சனின் இசை எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆங்கில இசை அறிவு இருந்தாலே ஒரு சில நண்பர்களை பெற முடிந்த நிலை. ஜாக்சனை தெரியாத ஒரு கல்லூரி பயலா என ஏளனமாக பார்த்தவர்கள் தான் நிறைந்திருந்தார்கள் கல்லூரியில் அப்போது நான் கெட்ட பாடல் தான் மிக்கேல் ஜாக்சனின் பில்லி ஜீன் (billy Jean). அப்போது எனக்கு ஆங்கில பாடலான இன்று வரை அவரது பாடல்களான என்றாலும், அந்த இசையும் அந்த குரலும் என்னை வசியம் செய்தது. (அதே பாடல் தமிழில் வெளிவந்த 'மங்கம்மா சபதம்' என்ற திரைப்படத்தில் 'சொர்கத்தின் வாசல் இங்கே' என்ற பாடலில் காப்பி அடிக்கபட்டிருந்தது.) அதன் பின்னர் தான் அவரின் பாடல்களை தேடி தேடி கேட்க ஆரம்பித்தேன்.

ஜாக்சனின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களில் சில
Black or white,
Bad,
Smooth Criminal,
Thriller,
Beat it,
Billy Jean,
We are the world.
Dangerous
Heal the world.
The Way you make me feel.

மைகேல் ஜாக்சன் அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கேரி (Gary) என்ற ஊரில் 1958 ஆம் வருடம் ஒரு கறுப்பின தம்பதியருக்கு ஏழாம் மகனாய் பிறந்தார். (அவர் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்).. தனது சிறு வயதில் தன தந்தையால் மிகவும் துன்புறுத்தபட்டார். அவரது தந்தை ஜாக்சன் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரை நேர்ப்படுத்த சாட்டையாலும் கைகளாலும் அடித்திருக்கிறார். தான் சிறுவயதில் தனிமையையே அதிகம் உணர்ந்துள்ளதாக மைகேல் பல நேர்முகங்களில் கூறி இருக்கிறார்.

ஜாக்சன் தனது ஐந்தாவது வயதில் தன பள்ளியில் கிறிஸ்துமஸ் க்காக பாடலை பாட ஆரம்பித்திருக்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடத்திய 'ஜாக்சன் 5' என்ற குழுவில் இணைந்து பின்னணி பாட ஆரம்பித்தார். பாப் இதழ்களின் முதன்மையான 'Rolling Stones' இதழ் சிறு வயது மைகேலை 'child prodigy' என கொண்டாடியது. இவ்வாறு அந்த குழுவில் இடம்பெற்று பல்வேறு நகரங்களில் மற்றும் ஒலி பேழைகளில் பாடி வந்த மைகேல் குவின்சி ஜோன்ஸ் உடன் இணைந்து வெளி இட்ட ஆப் தி வால் என்ற ஆல்பம் தான் அவரை உலகுக்கு காட்டியது. பல ரெகார்டுகளை முறியடித்தது.

1982 இல வெளிவந்த இவரது த்ரில்லர் ஆல்பம் தான் இவருக்கு திருப்பு முனை. சென்ற திசை எல்லாம் இவரது த்ரில்லர் தான் ஒலித்தது. உலகமெங்கும் விருதுகளை கொட்டி குவித்தது. இவருக்கு பாப் இசை உலக மன்னன் என்ற பட்டமும் கிடைத்தது.

புகழின் உச்சியில் இருந்த மைகேல் ஜச்சொனை தாக்கியது தனது நண்பனின் மகனான சிறுவன் ஜோர்டான் சாண்ட்லேரின் சிறுவர் வன்கொடுமை புகார். ஜாக்சனின் நண்பனான இவான் சாண்ட்லர், தனது மகனை ஜாக்சன் வன்கொடுமை செய்ததாக ஒரு வழக்கு போட பற்றி கொண்டு விட்டது ஊடகங்களின் தாக்கம். ஒவ்வொருவரும் யூகங்களின் அடிப்படையில் கண்ணா பின்னா வென எழுத ஆரம்பித்தனர். மைகேலின் வானளாவிய புகழ் மங்க ஆரம்பித்தது. தான் அப்படி செய்யவில்லை என்ன சத்தியம் செய்யாத குறையாக மைகேல் கூவியும் யாரும் அவரை நம்ப தயாராக இல்லை. அப்போது அவர் போதை பழக்கத்துக்கு அடிமையானார்.

அவருடைய துன்பகரமான அந்த நாட்களில் அவருக்கு ஆறுதலாய் இருந்தது புகழ் பெற்ற பாப் பாடகரான எல்விஸ் ப்ரெஸ்லி யின் மகள் லீசா மேரி ப்ரெஸ்லி. மே 1994 இல இவர்கள் திருமணம் நடைபெற்றது. இருவருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று நண்பர்களானார்கள், இருவரும்.

மைகேலுக்கு விர்டில்கோ (virtilgo) என்ற சரும நோய் தாகி அதற்க்காக தோல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது பழக்கமான டேபோரா என்ற தாதியை மணந்து 3 குழந்தைகளுக்கு தந்தையானார்.

39 சேவை அமைப்புகளுடன் இணைந்து அவர் சேவை செய்ததற்காக அவரது பெயர் கின்னேச்ஸ் புத்தகத்தில் இரண்டாயிரமாம் ஆண்டு இடம் பெற்றது.

நம்மூர் A.R. ரகுமான், மற்றும் பிரபு தேவா,ஷோபனா உடன் இணைந்து ஜெர்மனி மற்றும் கொரியாவில் தென்னாப்ரிகாவின் நெல்சன் மாநதேலாவுகாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி கொடுத்தார். கொசோவா நாடு அகதிகளுக்காகவும் குவாடமேலா நாடு குழந்தைகளுக்காகவும் நிதி திரட்டி தர பல கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினார்.

குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டிருந்த மைகேல் ஜாக்சன், அவர்களுக்காக நேவேர்லாந்து என்ற பண்ணை வீட்டை நிர்மாணித்தார்.

சிர்வர்களின் மீது வான் கொடுமை செய்ததாக கூறப்பட்ட புகாரில் மிகவும் இடிந்து போன மைகேல் உளவியல் ரீதியாக ஒடுங்கிப்போனார்.

ஜூலை 2009 முதல் மார்ச் 2010 வரை லண்டனில் தனது பாடல் நிகழ்ச்சிகளை நடத்த ஆயத்தமானார். அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போயின.

அந்த நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகி கொண்டிருந்த மைகேலை ஜூன் 25 2009 அன்று மாரடைப்பு ஏற்ப்பட்டு மரித்து போனார்.

அவர் வாழ்க்கையில் அதீத புகழையும், துன்பமான வறுமையையும் ஒருங்கே கண்டவர்.

அவரது மரணமும் அவரது வாழ்கையை போல மர்மமாகவே இருக்கிறது.

வானமே எல்லை என வாழ்ந்த மைகேல் இன்று அந்த லட்சியத்தை அடைந்து விட்டதாய் தான் தெரிகிறது...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...