Monday, June 30, 2008

புகைப்பட கவிதை .....கரை சேர...



பத்து மாசம் சொமந்தவதான்
பெத்து போட்டு போயிட்டா
பத்து நிமிசம் பாக்கலையே
சாமியாக ஆயிட்டா..

பத்து வருசம் ஆனபோதும்
நெஞ்சில் ஒன்ன சொமக்கறேன்
எஞ்சி இருக்கும் வாழ்க்கை எல்லாம்
ஒனக்குத்தான வாழறேன்...

கொளத்து தண்ணி மீனு போல
என் செல்வம் இங்கு வாழுது
கடலுக்கு தான் ஆசை பட்டா
'சுனாமி' வந்து தாக்குது.

துடுப்பில்லாத படகு போல
மனசு தத்தளிக்குது.
வாழ்க்கை கூட பரிசல் போல
சுத்தி சுத்தி அடிக்குது..

நீ என்ன பாத்து சிரிக்கும்போது
கண்ணு ரெண்டும் மின்னுது
அதுல தெரியும் நம்பிக்கை தான்
என்ன வாழ வக்கிது

பரிசல் போல நான் இருக்க
துடுப்பாக நீ இருக்க
வாழ்க்கை என்னும் நீரைத்தான்
தாண்டி சேர்வோம் கரைக்குத்தான்

---நிலா முகிலன்
புகைப்படம்- நிர்மல்

2 comments:

Vijay Emmanuel said...

azhagana pugai padam.. arumayana kavidhai...

mikka arumai !!!

NILAMUKILAN said...

நன்றி ஜெர்ஸ்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...