Thursday, February 5, 2009

இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதியை ஏன் குற்றம் சொல்கிறார்கள்?


இலங்கை தமிழர்கள் அனாதைகளாக வீடுகளற்று நாடற்று உறவினர் இழந்து உடைமைகள் இழந்து எப்போது தாங்கள் குண்டுகளுக்கு இரை அவோமோ என அஞ்சி துடித்து கொண்டிருக்கின்றனர். மருத்துவமனையில் குண்டு, பாதுகாப்பு பகுதியில் குண்டு என ஊடகங்கள் எழுதி வருகின்றன.
ராஜபக்ஷே சகோதரர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து சுத்தமாக துடைத்து எடுத்து விடுவது என கங்கணம் கட்டி கொண்டு தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் 'வெள்ளை ஊர்தியில்' அடியாட்கள் வைத்து கொன்று குவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் 'போர் நிறுத்தம்' என அலறினாலும் செவிமடுக்காது தங்களது ஆணவ போக்கினால் அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரி இதில் கருணாநிதி எங்கு நுழைந்தார். நாள் தோறும் ஏடுகளில் அரசியல் வாதிகள் அவரை விமர்சித்தும் (காங்கிரஸ் அரசியல்வாதிகள் தவிர) வலை பதிவாளர்கள் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கியும் வருகின்றனர்.
சில வலைத்தளங்களை படிக்க முடிவதில்லை. அப்படி நா கூசும் வகையில் அவரை வறுத்தெடுக்கிறார்கள். இது நியாயம் தானா? அவர் நினைத்தால் போர் நிறுத்தம் கொண்டு வந்து இலங்கையில் அமைதி திரும்பி விடுமா?
முதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வருவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு குழு கூறுகிறது. இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு உதவியாக அனுப்பி உள்ளது என்றும் கேரளா வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கிறது என்றும், ராடர்களை வழங்கி வருகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். இந்தியா எதற்காக இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு சோனியா காந்தி பழி வாங்குகிறார் என கூறுகின்றனர். அது அவ்வளவு எளிதானதா என தெரியாவிட்டாலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருவதற்கான காரணம் அரசியல் சம்பத்தப்பட்டதல்ல. இராணுவம் சம்பந்தப்பட்டது என்பதே எனது அனுமானம்.
இலங்கை இந்தியாவிற்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. வடக்கே பாகிஸ்தானும், கிழக்கில் பங்களா தேசும் மேற்கில் சீனாவும், இந்தியாவை எதிரிகளாகவே பார்க்கின்றன. இந்தியா இலங்கைக்கு உதவா விட்டால் இலங்கை நிச்சயமாக பாகிஸ்தானிடம் உதவிகள் கேட்க கூடும். அல்லது கிழக்கு ஆசியாவில் கால்கள் பதிக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் அமெரிக்காவும் நாக்கை சுழற்றிக்கொண்டு காத்திருக்கிறது. அமெரிக்கா மட்டும் இலங்கைக்கு உதவ ஆரம்பித்தால் இலங்கை அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஒன்றாகி விடும். பின் இந்தியாவிற்கு சோதனை தான்.
எனவே தான் மற்றவர்கள் உதவும் முன்பு தான் முந்தி கொண்டு இலங்கையின் நேசத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய எண்ணி இருக்க கூடும். உதவிகளை வெளிப்படையாக செய்ய நேர்ந்தால் உலகில் பல இடங்களில் இருக்கும் தமிழர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதற்காகவே இத்தனை ரகசியமாக கை ஆள்கிறதோ என அவதானிக்க வேண்டி இருக்கிறது.

சரி இந்தியா உதவிகள் செய்தால் விடுதலை புலிகள் பலம் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது. விடுதலை புலிகள், என்றும் இலங்கை ராணுவத்தை பார்த்து பயந்தது இல்லை. ஆனால் ஆள் பலத்தில் இந்திய ராணுவத்தை பார்த்து தான் அஞ்சுகிறது.
அரசியல் காரணங்கள் இவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்லவா. மற்ற மொழிக்காரர்களிடம் இல்லாத உணர்வு தமிழனுக்கு உண்டு. தமிழனுக்கு ஒன்று என்றால் உணர்ச்சி பிழம்பாகிவிடுவான் தமிழன். இதற்க்கு வரலாறே சான்று. இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் 25 ஆண்டு கால வரலாறு. சம உரிமை வழங்குவோம் சுயாட்சி வழங்குவோம் என இலங்கை அரசு சொல்லும் கூற்றை தமிழர்களும் விடுதலை புலிகளும் நம்ப தயாராக இல்லை.இப்போது கூட பாதுகாப்பு பகுதிகளுக்கு வாருங்கள் என தமிழர்களை அழைத்து அதே இடத்தில் குண்டு போட்டு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக லசங்கா என்ற பதிப்பாசிரியரை அடியாளை வைத்து கொன்றது இலங்கை அரசாங்கம். அரசுக்கெதிராக கருத்து கூறியமைக்காக 'ஜெர்மனி சுவிஸ் போன்ற தூதர்களை வெளியேற்ற தயங்க மாடோம்' என கோத்தபய ராஜபக்ஷேவை கொக்கரிக்க வைத்தது.
இதையெல்லாம் பார்க்கும்போது உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீன் நினைவுக்கு வருகிறார். உகாண்டா நாட்டினர் தவிர வேற யாரும் அந்த நாட்டில் வாழக்கூடாது என துரத்தி அடித்தவர் அவர். அரசுக்கெதிராக யாரும் கருத்து கூறினால் அதற்குப்பின் அவர்களை காண முடியாது.
தற்ப்போது உகாண்டாவின் ஆட்சி தான் இலங்கையில் நடக்கிறது என்று எண்ணும் வண்ணம் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சரி கருணாநிதியை எதற்காக எல்லாரும் சாட வேண்டும். அவர் தன்னை தமிழர்களின் காவலர் என கூறி கொள்பவர். மக்களும் அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.போரின் பிடியில் தவிக்கும் தமிழர்களின் நிலை அவருக்கு தெரியாமலா இருக்கும்? வாரத்துக்கு ஒரு அறிக்கை அவரிடம் இருந்து வருகிறது. 'இலங்கை தமிழனுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயார்' என்று கூறினார். ஆனால் அவருக்கு தசைபிடிப்புக்காக இப்பொது ஊசி போட்டு கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

'இலங்கை தமிழனுக்காக பதவி துறக்கவும் தயார் ' என கூறிய கருணாநிதி 'எப்போது திண்ணை காலி ஆகும் என எதிர்கட்சிகள் எண்ணுகிறார்கள் அவர்கள் ஆசை வீண்' என நய்யாண்டி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு திண்ணை மட்டுமே இப்போது குறிக்கோளாக பொய் விட்டது. எங்கோ தூத்து குடியில் பிறந்த ஒரு தமிழனுக்கு இருந்த தமிழின உணர்வு, தமிழ் காவலராக தன்னை பிரகடனம் செய்த்கொண்ட ஒரு மாபெரும் தலைவருக்கு இல்லாமல் போனது வேதனை. தீ குளித்த முத்துகுமரனின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் வழங்கி விட்டதோடு இவரது தமிழின உணர்வு முடிந்து விட்டது.
பிரணாப் இலங்கை செல்கிறார் போர் நிறுத்தம் குறித்து பேசுவார் என சொல்லப்பட்டது. அவரும் சென்றார். 'இலங்கையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது' என அப்பட்டமான பொய் அறிக்கை விடுகிறார்.
இலங்கை தமிழருக்காக கூண்டோடு ராஜினாமா என்று கூறிய கருணாநிதி இன்று திண்ணை காலி ஆவதை பற்றி நினைக்கும் காரணமென்ன?. அவர் பார்க்காத பதவியா, அவர் அமராத முதலமைச்சர் நாற்காலியா? இந்த தள்ளாத வயதிலும் எதற்கு பதவி மேல் மோகம்?. அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்த பிறகாவது அவரது பதவி மோகம் அவரை விட்டு விலகுகிறதா என பார்க்க வேண்டும்.
இதற்காக மற்ற கட்சிகள் தமிழனுக்காக வாளேந்தி போர் புரியும் என்று நான் சொல்ல வில்லை. அதற்கான அருகதையும் அவைக்கு இல்லை. கருணாதியை மட்டுமே தமிழர்கள் நம்பி வந்ததால் தான் இந்த பதிவு.

கருணாநிதி நினைத்தால் அவருடைய பதவி துறந்து போர் நிறுத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்ய முடியும். போர் முகத்தில் தவிக்கும் எம் தமிழனை காப்பாற்ற முடியும். என்று தமிழும் தமிழனும் தனக்கு முக்கியம் என கருதி பதவி துறந்து தமிழனுக்காக போராடுகிறாரோ அன்று தான் அவர் தமிழ் காவலன். இல்லையேல் அவர் வெறும் திண்ணை காவலன் மட்டுமே.

9 comments:

karu said...

thinnaikkaavalan,unmai

thamilmagan said...

neengal sonna karuthukkul anaithum arumai,anal ""engo thoothukudu yil""endre varthaiyai thavira,thoothukudi tamilakathil than ullathu,nanum thoothukudi karan endre murayil,ithai sollkiren.

NILAMUKILAN said...

நன்றி கருணாநிதி.

NILAMUKILAN said...

சுரேஷ். தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை. அங்கு இருக்கும் கருணாநிதிக்கு தூத்துக்குடி எங்கோ தானே.முத்துக்குமரன் உயிர் த்யாகம் செய்த இடமும் தூத்துக்குடி அல்ல.சென்னை தானே. உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள் தான். எனினும் எனது பதிவு உங்களை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

Anonymous said...

100% True

ராஜ நடராஜன் said...

நிலா முகிலன்.அலசித்தான் உள்ளீர்கள்.தற்போது கலைஞரை குற்றம் சொல்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க அனுதாபிகள் சில நாட்கள்,வாரங்கள்,மாதங்களுக்கு முன்பு.

ராவணன் said...
This comment has been removed by a blog administrator.
thamilmagan said...

anna neengal solvathu pol chennaiyil irunthu thoothukudi thoorame,apadiyanal elangai ennum thooramallava,athanal than ennamo avaral kavanikka mudiyavillai.entha visayathil nam anaivarum tamilan endre murayil ondraka eyanguvom.

Anonymous said...

கருநாக நிதியின் இன்றைய அறிக்கை யும் நமது பார்வையும்...

//ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க. தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.//
ஆமாம் தாங்கள் பதவி விலகி இருந்த்தால் பதவி ஆசை உள்ள கட்சிகள் எவை என தமிழக மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம் அல்லவா?ஏன் செய்யவில்லை..


//அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற "மனிதச் சங்கிலி'' நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன//
எப்படி தலைவா காங்கிரஸ் கம்முனாட்டிகள் பத்தி நாசூக்கா தவிர்கிறீர்கள்?

//நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை//
தூத்தேறி இதுதான் அடுத்தவன் பெத்ததை எனக்கு பிறந்தது என்று சொல்வதா?ஈழ தமிழர்கள் அவனவன் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் ஐ.நா சபை முன்பும் பிற நாடுகளின் தூதரங்கள் முன்பும் போராடியதால் வந்தது.. இவ்வாறான அறிவிப்புகள்

//அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.//

சோனியா புடவைக்குள் பா.சி ஒளிந்திருந்தாலும் ஒரு தமிழராக கிஞ்சித்தேனும் உணர்வு வந்து சொல்லிருப்பார்.. ஆனால் சிறிது நேரத்திலே பேட்டி அளிக்கும் குள்ள புஷ்கான் பிராணாப்பு உயிர்பலி இல்லாமல் சண்டை போட வேண்டுமாம்! அப்பவும் அவன் போரை நிறுத்த சொல்லவில்லை? இதற்கு உமது வக்காலத்து வேறு?

//இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை//
வேடிக்கை தான் நாங்கள் பார்த்தோமே! தாம்பரத்தில் இருந்த்து சிங்கள ராணுவத்தை பெங்களூர் சென்று தமிழரை கொல்ல பயிற்சி பெற்றதை! ஆமாம் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை ...அதாவது வழக்கம் போல கேனை தமிழர்களா... மறுபடியும் காங்கிரசுக்கு வாக்களிக்க சொல்லுகிறீர்கள்!இதெல்லாம் ஒரு பொழப்பு ..உங்கள் அன்னை சோனியா பாதுகாப்பாக சென்னைக்கு பிரசாரத்திற்கு வருவாரா? தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் .. தூத்தேறி..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...