Tuesday, December 1, 2009

அது ஒரு மழைக்காலம்!



இக்கவிதையை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.

அது ஒரு மழைக்காலம்!
------------------------------
அவள்...
என் வாழ்க்கை வானத்தில்
மின்னி மறைந்தாள்

மேகங்கள்
என்னை விலகி சென்றன...

என்
இதயத்தின் இடிமுழக்கம்
எனக்கு மட்டும் கேட்டது.

என்
கனவுத் துளிகள்,
மண்ணில்
விழுந்து தெறித்தது.

என் கண்களில்
புறப்பட்ட
வெள்ளம்
என்
இதழ் கடந்து மார்பை நனைத்தது.

என்
நம்பிக்கை மரங்கள்,
அறுந்து விழுந்தன.

மனதில் பாய்ந்த
மின்சாரத்தால்,
என்
காதல் மனிதர்கள்
மாண்டு போனார்கள்.

ஒளியை தொலைத்த
என்
வாழ்க்கை பிரதேசங்கள்...
இருட்டில் இளைத்தன.

இன்று....
மழை ஓய்ந்துவிட்டது

என்
இதயபூமி
காத்திருக்கிறது
அடுத்த மழையை
எதிர்பார்த்து....!

-நிலா முகிலன்
=============

2 comments:

கமலேஷ் said...

என்
இதயபூமி
காத்திருக்கிறது
அடுத்த மழையை
எதிர்பார்த்து....!

நல்ல கவிதை...
நல்ல வரிகள்...

NILAMUKILAN said...

நன்றி கமலேஷ்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...