Thursday, May 13, 2010

ஷான் பென்னும் ஒரு டிப்தீரிய சிறுவனும்...!



ஒரு நடிகன் என்பவன் யார்?
நமக்கு தெரிந்த வரையில், நடிகன் என்பவன் ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பாதிப்பவன். படத்தில் தோன்றி ஆங்காங்கே பன்ச் டைலாக் சொல்லி கைதட்டலும் விசிலும் வாங்குபவன்,  அவன் பட வெளியீடு அன்று அவனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்து  ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியே 'அப்படி எல்லாம் செய்ய கூடாது' என்று சொல்பவன். தனது பிறந்த நாளன்று ஒரு இருபது பேருக்கு தையல் மெசினையும், இருபது இலவச கல்யாணங்களையும் நடத்தி வைத்து தனது சமூக ஆர்வத்தை உலகுக்கு பத்திரிகைகளில் போட்டோ அனுப்பி அறிமுகப்படுத்துபவன். சில படங்களில்தலைகாட்டியதும்  தளபதி, தல, நாயகன், ஸ்டார் என்ற பட்டத்தை போட்டுக் கொள்பவன். இதுவெல்லாம் செய்தால் போதும், அடுத்த முதல்வர் தானே எனக் கனவு காண்பவன்...

நமது நடிகர்களுக்கெல்லாம்  மேலே மில்லியன் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் ஹாலிவூட் நடிகர்கள். அவர்கள் பட்டங்கள் போட்டுக் கொள்வது இல்லை. எல்லா படங்களிலும் பன்ச் டயலாகுகள் இல்லை. அவர்களை ஒரு சக மனிதனாக மட்டுமே கருதுகிறார்கள் அவர்களது ரசிகர்கள்.(ஆட்டோக்ராபோடு நின்று விடுகிறது இவர்களின் ரசிகர்களின் அன்பு).  சில நடிகர்களிடம், நடிப்பதும் தாண்டிய ஒரு மனித நேயத்தை காண முடிகிறது. ஹைதியில் நில நடுக்கத்தில் அந்த நாடே உடைந்து வீழ்ந்த பொது, தனது விமானம் முழுவதும் மருந்துகளை வாங்கி போட்டு தானே விமானத்தை ஒட்டி ஹைதியில் தரை இறக்கினார் ஹாலிவுட் நடிகர் ஜான்  டிரவோல்டா.

டிரவோல்டா .. தனது விமானத்தில்...ஹைதிக்கு பறந்த பின்னர்...


அனைத்திற்கும் மேலாக, இருமுறை ஆஸ்கார் வென்ற கலைஞன் ஷான் பென், ஒரு அறகட்டளை ஆரம்பித்து அதன் மூலம் பல இயற்க்கை அழிவுகள் நிறைந்த இடங்களுக்கு சென்று உதவி வருகிறார். இப்போது அவர் ஹைதியில் செய்து கொண்டிருப்பது அவரது மனித நேயத்தை பறை சாற்றுகிறது. இரு முறை ஆஸ்கார் அவார்டுகளை வென்றும் மூன்று முறை ஆஸ்காருக்கு பரிந்துரையும்பெற்றிருக்கிறார்.

சமீபத்திய நிலநடுக்கத்தால் சல்லடையாக்கப்பட்ட ஹைதியில் இப்போது இந்த ஹாலிவுட் புயல் மையம் கொண்டுள்ளது. தானும், ஒரு பெண் தொழிலதிபரும் இணைந்து ஆரம்பித்த அறக்கட்டளை சார்பில் தற்போது ஹைதியில் தங்கி ஹைடி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும், அவர்களுக்கு கூடாரங்கள் அமைத்து தரவும் முனைந்துள்ளார். அவர் மாட மாளிகையில் அமர்ந்து கொண்டு சும்மா பம்மாத்து செய்துகொண்டிருக்கவில்லை. அவர் தற்போது ஹைதியின் தலை நகரமான போர்ட் ஒ பிரின்ஸ் இல் மக்களோடு மக்களாக ஒரு கூடாரத்தில் தனது அறக்கட்டளை சார்பில் வந்துள்ள தன்னார்வ தொண்டர்கள் மத்தியில் தங்கிஉள்ளார்.

                                                ஷான், தனது கூடாரத்தின் முன்...

ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு டிப்தீரியா என்ற கொள்ளை நோய் தக்க பட்டது அறிந்ததும் அவனுக்கு மருந்து வாங்க தான் பதினோரு மணி நேரம் அலைந்ததாக வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்றும் அது வெகு விரைவில் மற்ற குழந்தைகளையும் வயோதிகர்களையும் தாக்க கூடும் என்பதால் அதனை முளையிலேயே களையவே அவர் அவ்வளவு மெனக்கெட வேண்டி இருந்தது. டிப்தீரியா சுகாதாரமற்ற சூழலும் சரியான உணவும் இல்லையென்றாலும் மக்களை தாக்க கூடும். அது வெகு விரைவில் மற்றவர்களுக்கு பரவி உயிர்பலிகள் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புண்டு என்பதால் அமெரிக்க ராணுவம், ரெட் கிராஸ் எவரிடமும் அந்த மருந்து இல்லாமல் பின்னர் உலக சுகாதார மையத்தை அழைத்து மருந்தை வரவழைத்து அவனை காப்பாற்றியுள்ளார் ஷான்.

டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்பதால் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்பதால், எந்த மருத்துவமனையும் முதலில் ஓரியல் என்ற அந்த சிறுவனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஷான், தானே கையோடு எல்லா மருத்துவ மனைகளிலும் ஏறி இறங்கி வாதாடி, பின்னர் பொது மருத்துவமனையில் சேர்த்து அவனுக்கு மருந்து வாங்கி அளித்துள்ளார்.

ஐம்பதாயிரம் மக்களை தன கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.  அவர் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகராக இருந்தும், மில்லியன் கணக்கில் பணம் இருந்தும், அவரை ஹைதியில் யாருக்கும் தெரியவில்லை.அவரி பற்றி கேட்டால்,   'அவர் ஒரு நல்ல மனிதர்' என்று மட்டும் சொல்கிறார்கள்.
சிலருக்கு மட்டும் அவர் பாடகி மடோன்னாவின் முன்னாள் கணவர் என்ற மட்டும் தெரிந்திருக்கிறது.

ஒரு அமெரிக்கனான அவருக்கு ஹைடி மக்கள் மேல் அக்கறை என்ன? அவர் தனது அறக்கட்ளை மூலம், கத்ரீனாவில் சீரழிந்து போன நியூ ஓர்லீன்ஸ் நகரத்திற்கும் சென்று மக்களளுக்கு உதவியுள்ளார்.அவரது சேவைகளை பற்றி யாராவது பாராட்டி பேசினால், ' நான் போடுவது ஒரு பாண்டேஜ் மட்டும் தான். ஆறாத காயங்கள் பல உள்ளன. இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியது நிறைய இருக்கிறது' என்று சொல்கிறார். மற்றும் அவருக்கு பத்திரிக்கையாளர்களையும் தன்னை படம் பிடிக்கும்பப்பராசிகளையும்  பிடிப்பதில்லை.

நமது தமிழகத்தில் சுனாமி பேரலையில் மக்கள்,தம்  வீடு உடமைகள் உறவுகள், உயிர்கள் யாவும் இழந்து நிற்கும்போது, மும்பையில் இருந்து விவேக் ஓபராய் தான் வரவேண்டி இருந்தது. நமது தலைகளும்  தளபதிகளும், நாயகன்களும் ஸ்டார்களும் எதிர்கால முதலமைச்சர் நாற்காலி கனவில் இருந்திருப்பார்கள் போலும்.

ஷான் பென்னின் நேர்முக ஒளி சுட்டி.


10 comments:

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் அறிய வேண்டிய தகவல்......

Keanu said...

யாராவது இந்த கட்டுரைய பல போர்களங்கள் கண்ட தளபதிக்கும் கேப்டன் கருப்பு எம்.ஜி.ஆர் -க்கும் அனுப்பிவைங்கபா

நேசமித்ரன் said...

முகிலன் பயனுள்ள இடுகை

ஹேமா said...

மனிதம் ஒருவேளை வெளிநாடுகளிலோ முகிலன் !

வால்பையன் said...

அவன் தான் மனிதன்!

NILAMUKILAN said...

அதே சங்கவி நன்றி.

NILAMUKILAN said...

கியானு அவர்கள் பிசியா இருப்பாங்க நன்றி உங்க வருகைக்கு

NILAMUKILAN said...

நன்றி நேசமித்திரன்.

NILAMUKILAN said...

மனிதம் இல்லாமல் ஆட்சி கட்டிலுக்கு ஆசை பாடலாமா ஹேமா?. வருகைக்கு நன்றி.

NILAMUKILAN said...

உயர்ந்த மனிதன் வால்ஸ். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...