Friday, May 14, 2010

வலி!

உறைந்து போன விழிகளும்,
ஒடுக்கப்பட்ட  மொழிகளும்,
உடைந்து போன கனவுகளும்,
நடுக்கமுள்ள நனவுகளும்,

தொலைந்து போன உறவுகளும்,
தவிக்கப் பற்றும் இரவுகளும்,
உலர்ந்து போன ரத்தமும்,
தெளிந்து போகா பித்தமும்,

காற்றில் நாறும் தசைகளும்,
பழுதுபட்ட விசைகளும்,
மறைந்து போன மனிதமும்,
மாற்றி எழுதிய  கணிதமும்,

தமிழும் எம்மை கைவிட..
உமிழும் நீராய் நாம் உளோம்.
அமிலமான வாழ்கையே..
அடுத்த அடுத்த வேளையே..

இருந்தும் ஒளியை நோக்கிய
பயணம் முடியவில்லையே..
விடியல் காணும் நாள் நினைத்து..
வலி மரத்து போனதே..!

--ஈழப் படுகொலைகளின் நினைவாக...
--

2 comments:

ஹேமா said...

முகிலன்...
தமிழின் உணர்வுக்காய் நன்றி.
விடியலுக்காய் வேண்டியபடி நானும்.

இந்த வாரம் முழுதுமே முள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தின் துக்கவாரம்தான்.
நினைவு கொள்வோம்.

நேசமித்ரன் said...

:(


காயத்திலிருந்து வழியும் சுடும் குருதி தோய்த்து எழுதப் படுபவையாக இருக்கின்றன படுகொலைகள் குறித்த வரிகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...