Friday, June 19, 2015

கவிதை: வாசனை.

செய்தி: மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி


வாசனை.
---------------
தலைக்கவசம் தாண்டி

தெறித்த

ரத்தத் துளிகள்,

அந்தக் கண நேரத்தில் ..

அவனுக்கு ஞாபகப்படுத்தின,

பனித்துளிகள் சிதறிய

முன்னிரவின் தனிமையில்,

சிறகுகள் விரித்த காற்றுப் பறவையினிடையே,

கர்ப்பிணி மனைவியின்

வயிற்றில் காது வைத்து

கேட்கப்பட்ட

சிசுவின் ஒலியில்,

அவள் புன்னகையின்

வெளிச்சச் சூட்டில்

முகத்தில் கோடிட்ட

வியர்வைத் துளியின் வாசனையை ...!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்
படிப்பவரும் உணரும் வண்ணம்
அமைந்த கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...