நோயுற்ற நண்பனுடன் உரையாடுதல்...
========================================
நண்பனுடன்
எப்போதும் போல
பாசாங்குகளற்று
உரையாடுதல்,
அவன் நோயுற்றபின் ....
எளிதாக இருப்பதில்லை!
அவன் ,
தன் வலி மறக்கத்தான்
வீடு சென்று
உரையாடினேன்.
நடுவே
ஏதோ ஒரு நொடியில்
சட்டென்று
அவன் அமைதியாக ...
காரணம் தேடி
உணர்ந்தேன்..
அவன்
நோயின் மேல்
எனது ஒரு சொல்
குவிந்திருந்ததை....
நோயுற்ற
நண்பனுடன்
நேரில் உரையாடுவதை விட
சற்று தள்ளி
மண்டியிட்டு
அவனுக்காக பிரார்த்திப்பது
எளிதாக இருக்கிறது.
========================================
நண்பனுடன்
எப்போதும் போல
பாசாங்குகளற்று
உரையாடுதல்,
அவன் நோயுற்றபின் ....
எளிதாக இருப்பதில்லை!
அவன் ,
தன் வலி மறக்கத்தான்
வீடு சென்று
உரையாடினேன்.
நடுவே
ஏதோ ஒரு நொடியில்
சட்டென்று
அவன் அமைதியாக ...
காரணம் தேடி
உணர்ந்தேன்..
அவன்
நோயின் மேல்
எனது ஒரு சொல்
குவிந்திருந்ததை....
நோயுற்ற
நண்பனுடன்
நேரில் உரையாடுவதை விட
சற்று தள்ளி
மண்டியிட்டு
அவனுக்காக பிரார்த்திப்பது
எளிதாக இருக்கிறது.
No comments:
Post a Comment