Friday, August 7, 2009

இன்றைய காதல்...!



அவன்
கனவுகளில்,
காலையின் உதயத்தில்,
புல்லின் பனித்துளியில்,
வானவில்லின் வர்ணங்களில்,
குழந்தையின் ஸ்பரிசத்தில்,
மழைக்கு முந்தய வாசத்தில்,
தூறலின் சாரல்களில்,
அலைகளில் நனைகையில் ,
கணினி திரையின் பிம்பங்களில்,
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்,
ஒளித்து வைத்த மயிலிறகில்,
அவளையே கண்டும்,உணர்ந்தும்,ஸ்பரிசித்தும் வாழ்ந்தான்....
அடுத்தவளை
காணும் வரை...!
----------------------------------------

4 comments:

ஹேமா said...

முகிலன்,
ஓ...வெளிநாட்டுக் காதல்போல.
அல்லது பொய்யான காதல்.
கற்பனை சரிதான்.

NILAMUKILAN said...

அயல் நாடு எதற்கு ஹேமா. தமிழகத்தில் கூட இப்போ இப்படி தான் இருக்கு.

SUMAZLA/சுமஜ்லா said...

மென்மையை மென்மையாக சொல்லி, முரட்டுத்தனமாக முடிகிறது!

NILAMUKILAN said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுமஜ்லா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...