Tuesday, September 15, 2009

ஒரு தாயின் தாகம்!


குழந்தை பிறந்தால் போதும்.நமது பெண்களுக்கு கவனம் எல்லாம் குழந்தையின் மீது. தங்களது கடந்தகால சாதனைகளை மறந்து விடுவார்கள். உடல் மேல் அக்கறை இல்லாமல் பெருத்து விடுவார்கள். தாங்கள் பெரிய நடன கலைஞராக இருப்பார்கள். பெரிய விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்கள். அலுவலகங்களில் மேலதிகாரியாக இருப்பார்கள்.ஆனால் குழந்தை பிறந்ததும் அனைத்தும் குழந்தைக்காக என தங்களது வாழ்கையை, சிந்தனையை அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.அத்துடன் அவர்களது லட்சியம் எல்லாம் தொலைந்து விடும்.

2005 இல யு எஸ் ஓபன் சாம்பியன். உலக டென்னிஸ் தரப்பட்டியலில் முதலிடம் என இருந்த பெல்ஜியத்தின் கிம் க்ளைட்ஜெர் முதுகு வலி மற்றும் காயம் காரணமாக டென்னிஸ் இலிருந்து ஓய்வு பெற்றார். ஜூலை 2007 இல் அமெரிக்காவின் கூடைபந்து வீரரான ப்ரியன் லிஞ்சை மனம் முடித்த கிம் 2008 பிப்ரவரியில் ஜடா எல்லீ என்ற பெண் பெற்றெடுத்தார்.
மணக்கோலத்தில் கிம்.

டென்னிஸ் விளையாட்டின் மேல் உள்ள காதலும், மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உந்தி தள்ள, தன கணவனின் ஊக்குவிப்புடன் மீண்டும் டென்னில் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பித்தார். ஜனவரி 2009 இல் தனது தந்தையை இழந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு வெறியுடன் போராடினார். தரபட்டியலில் இல்லாத ஒரு வீராங்கனையான கிம் கிளைட்ஜெர்ஸ் நிச்சயம் இறுதி போட்டி வரை தாக்குபிடிக்க கூடும் என்றே டென்னிஸ் வல்லுனர்கள் யாரும் நினைக்க வில்லை.

டென்னிசில் அசைக்க முடியாத சக்தியான வில்லியம்ஸ் சகோதரிகள் நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். டென்னிஸ் தரப் பட்டியலில் பத்தாவதாக இருந்த டென்மார்க்கை சேர்ந்த வோஜ்நியாகியை புலி போல எதிர் கொண்டார்.ஆடுகளத்தின் ஓரங்களுக்கு ஓடி ஓடி இவர் பந்தெடுத்து அடித்து ஆடிய விதம் வோஜ்நிஆகியை திண்டாட செய்தது. கிம்மின் புலி பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பதினேழு வயதான வோஜ்நியாகி அந்த இருபத்தி ஆறு வயது தாயிடம் தோற்றுப் போனார்.
ஜடா மற்றும் வெற்றிக் கோப்பையுடன் கிம்.


அந்த முழு போட்டியையும் தனது கணவன் மற்றும் தன் குழந்தையும் பார்க்கதான் ஆடி வெற்றி கொண்டார். போட்டியின் வெற்றி கோப்பையை அவர் கையில் வாங்கும்போது தனது குழந்தை ஜடாவையும் அழைத்து அந்த கோப்பையை அவளிடம் கொடுத்து அக்குழந்தை அந்த கோப்பையை வைத்து விளையாடியது ரசிக்கத்தகுந்த காட்சி.

இறுதியில் அவர் தொலைக்காட்சி நிருபருக்கு பதில் அளிக்கையில் அவர் கூறியது.....

'என் குழந்தை ஜடாவுடன் நான் முழுக்க நேரம் செலவு செய்து நாட்காளாகிவிட்டது.இனி வரும் சில மாதங்கள் எனது நேரம் அவளுக்கும் எனது கணவனுக்கும் மட்டும் தான்.'

சாதனைகள் செய்யத்துடிக்கும் தாய்மார்களுக்கு கிம் கிளைட்ஜெர்ஸ் ஒரு முன்னோடி.

வாழ்த்துக்கள் கிம்!

-----------

2 comments:

ஹேமா said...

முகிலன் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் வெளிநாடுகளில் இது இயல்பே.
எங்களைப்போல அவர்கள் சோர்ந்து போவதில்லை.தங்களைத் தாங்களே அலுத்துக் கொள்வதில்லை.

கண்ணகி said...

positive block and positive approach. keep it up.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...