Tuesday, September 29, 2009

வீரப்பெண் ருக்க்ஷானா


என்னவென்று சொல்வது... புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் என்ற காலம் பொய், பயங்கரவாதியை துப்பாக்கியால் கொன்று மீதமுள்ள பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டிய காஷ்மீரிப் பெண் என்று காலம் வெகுவாக முன்னேறிவிட்டது.

செய்தியை படித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்தது. அந்த பெண் இருக்கும் திசை நோக்கி கைகள் கூப்பி நின்றது. அவளது வீரம் நிச்சயமாக வணக்கத்திற்க்குரியது.

காஷ்மீர் மாநிலத்தில் 27 செப்டம்பர் இரவு ஒன்பதரை மணியளவில் ஜம்முவின் ரசூரி மாவட்டத்தில் உள்ள கிராமமான தனமண்டி கிராமத்தின் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியில் மூன்று தீவிரவாதிகள், ஏ கே ரக ஆயுதங்களுடன், ருக்க்ஷானாவை வீட்டின் வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டது அவர்கள் குரல். ருக்ஷானாவின் பெற்றோர் அவளை மறைத்து வைத்துவிட்டு அவர்களுடன் அனுப்ப மறுக்க, அவர்களை தாக ஆரம்பித்தனர் தீவிரவாதிகள். ருக்ஷானாவின் தம்பி தங்கள் பெற்றோரை காக அவர்களை நோக்கி ஒரு கோடாலி எடுத்து வீச தடுமாறி விழுந்த தீவிரவாதியின் ஏ கே ரக துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி சுட்டாள் ருக்க்ஷானா. அங்கு வந்த குழுவின் தலைவனான அவன் அதே இடத்தில் மாண்டு போனான். எஞ்சி இருந்தவர்களை நோக்கி சுட்டு அவர்களை காயமுற செய்து அவர்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓட ஓட விரட்டி உள்ளனர், ருக்ஷனாவும் அவளது குடும்பத்தினரும். இறந்து போன தீவிரவாதி லஸ்கர் எ தோய்பா குழுவை சேர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த உஸப்ப ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிராம பாதுகாப்பு குழு தந்த பயிற்சியே தனக்கு துப்பாக்கியை இயக்க மிகவும் உதவியது என கூறி இருக்கிறார் ருக்ஷானா. அவருக்கும் அவரது தம்பிக்கும் அவர்களது தைரியத்தை மெச்சி போலீஸ் வேலை தர உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாம். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளதாம். இது போதாது . தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டி மற்ற காஷ்மீரி மக்களுக்கு, உதாரண பெண்மணியான ருக்ஷனாவுக்கு மேலும் விருதுகள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் மற்ற மக்களுக்கும் கிராம பாதுகாப்பு குழுவின் பயிற்ச்சி அவசியம். மக்கள் வெகுண்டெழுந்தால், தீவிரவாதம் தலை தூக்காது. ஏன் எந்த எதிரி நாடும் நம்மிடையே வாலாட்ட துணியாது.

பயங்கரவாதிகளை கண்டு நடுங்கும் நமக்கு முன்னால் ஒரு உதாரண பெண்மணியாக, தைரிய லட்சுமியாக விளங்கும் ருக்ஷானாவையும் அவளது குடும்பத்தையும் இருகரம் குவித்து வாழ்த்தி வணங்குகிறேன்.
-----

3 comments:

Anonymous said...

வீரத்திருமகள் வாழ்க பல்லாண்டு...

Anonymous said...

karunanidhikku intha seythi yettiyatha..

கண்ணகி said...

good. keep it up.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...