Saturday, October 3, 2009

நகைச்சுவை குற்றங்கள் -3


திருடன் போலீஸ் !!!!
====================

சிறையில் இருந்து விடுதலையான நியூயோர்க்கை சேர்ந்த ஜெரமி வாஷிங்டன் என்ற முப்பத்தி மூன்று வயது மனிதன், தனது வயிற்றுப்பாட்டிற்க்காக மீண்டும் கொள்ளையடிக்க முடிவு செய்தான். ஒரு பொம்மை கடையில் சென்று,சிறையில் சம்பாரித்த பணம் கொண்டு ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் கூட்டம் குறைவாக இருக்கும் மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின் மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட, ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின் கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். இதனை எதிர்பார்க்காத ஜெரமி அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான். ஆம் அவர்கள் இருவரும் நியூயார்க் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை சென்ட்ரல் பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்.

சளிபிடித்தால் சனி பிடிக்கும்.
=======================

இங்கிலாந்தில் உள்ள புர்ந்லேயில் மிச்சேல் ரொபின்சன் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார். அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த மிச்சேல் தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில் தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன் தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண, உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் மைகேல் ஆர்தர் போல்டேன்.அவனது பையினுள் மிச்சேல் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த சில இனிப்புகளும் வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான். திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்தவன் நகையையும் இனிப்பையும் மிச்செலின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். போலீசில் மாட்டிக்கொண்டான்.
----------

4 comments:

அக்னி பார்வை said...

:)))))))

ஹேமா said...

பாருங்க முகிலன்,எப்பிடியெல்லாம் சனி பிடிக்குதுன்னு.

NILAMUKILAN said...

நன்றி அக்னிபார்வை மற்றும் ஹேமா..

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல வித்தியாசமான திருடர்கள்தான் பகிர்வுக்கு நன்றி தோழரே

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...