Sunday, January 10, 2010

காதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..!(ஒரு ஜாலி கானா..)


காதலிச்சி பாருன்னு
சொம்மாவா சொன்னாங்கோ...
நான் சொல்லறத கேட்டுபுட்டு
இன்னான்னு கேளுங்கோ.

அறியாத நேரத்துல
மூக்கு கீழா முடி மொளைக்கும்
புரியாத வயசுலதான்
லவ்வு மூடு ஸ்டார்ட் ஆவும்.

நா பாக்கும் பிகரு எல்லாம்
செட் ஆகி போச்சுதுங்கோ..
அழகான போண்ணுக்கல்லாம்
கல்யாணம் ஆச்சிதுங்கோ

இஸ்கூலு போற பொண்ணு
பல்சர் பார்ட்டி தேடுதுங்கோ..
காலேஜ் பொண்ணு எல்லாம்
டிஸ்கோ கூட்டி 'போ' ன்னு துங்கோ..

மிஸ்ட் காலு உட்டாக்கா..
மிஸ் ஆகி போவுதுங்கோ..
எஸ் எம் எஸ் அனுப்பினாக்கா
எஸ் ஆகி போகுதுங்கோ...

கிராமத்துல அத்த பொண்ணு
இருக்கான்னு தேத்திக்கிட்டேன்...
ஜல்லிக்கட்டு காளயடக்கி
ஒருத்தன் அவள தேத்திபுட்டான்.

ஊரெல்லாம் தேடி அலைஞ்சி
கவித போல ஒன்னு கிறுக்கி
எடுபிடியா நா திரிஞ்சி..
அவ என்ன பாத்து சிரிச்சி..

லவ்வு கொஞ்சம் செட் ஆகி,
ஊரு கொஞ்சம் சுத்திபுட்டா..
அயல் நாடு மாபிள்ள வந்தா
அண்ணான்னு சொல்லிபுட்டா..
--------

6 comments:

ரோஸ்விக் said...

எவ எவளோ ஓடி போனா-அதுக்கு
ஒரு ஜாலி கானாவா?

அசத்தல். :-))

sathishsangkavi.blogspot.com said...

//கிராமத்துல அத்த பொண்ணு
இருக்கான்னு தேத்திக்கிட்டேன்...
ஜல்லிக்கட்டு காளயடக்கி
ஒருத்தன் அவள தேத்திபுட்டான்.//

வாவ்.... சூப்பர்....

எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.....

NILAMUKILAN said...

வாங்க ரோஸ் விக் . என்னங்க பண்றது.. காயப்பட்ட மனச கானா பாடி தான் தேத்த வேண்டி இருக்கு.

NILAMUKILAN said...

நன்றி சங்கவி. உங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

முகிலன்...நடுநடுவில கவிதையும் வருதா !

எப்பிடி இருக்கீங்க.முகில்குட்டி என்ன செய்றார்.ரொம்பக் குழப்படியா எங்க நிலாக்குட்டிபோல.
சுகம்தானே முகிலன்.

உங்களுக்குக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சந்தோஷமா இருங்க முகிலன்.

NILAMUKILAN said...

வாங்க ஹேமா ரொம்ப நாளாச்சி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

இது கவிதையா? இது சும்மா உளுலுவாய்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...