Sunday, February 12, 2012

காதல் என்பது...!



காதல் என்பது...

ஒரு

ஐஸ் கிரீமுக்கு

இரண்டு ஸ்பூன்கள்

கேட்பது.


 காதல் என்பது...

மதிய வெய்யிலில்,

மெரீனா மத்தியில்,

குடைக்குள் மறைந்து

மறந்து கிடப்பது...



காதல் என்பது...

காதலியிடம்,

காதலனை,

பல பொய்கள்

சொல்ல வைப்பது.



காதல் என்பது..

காதலனிடம்,

காதலியை,

பல உண்மைகளை,

மறைக்க வைப்பது,



காதல் என்பது...

கை நகம்

கடிக்க வைத்து

நட்சத்திரங்களையும்

வெண்ணிலவையும்

ரசிக்க வைப்பது.



காதல் என்பது...

கண்ணாடி முன் நின்று

காலங்களை

தொலைப்பது.



காதல் என்பது...

வராத

கவிதையை,

வரவைத்து

எழுதுவது



காதல் என்பது...

பிரிவெனும் துயரத்தில்,

துளிர்க்கும்
 
கண்ணீர் துளியின்  

முற்றுப்புள்ளியில்

முடிந்து போவது.

9 comments:

S.முத்துவேல் said...

அஹாஆஆ
ம்ம்ம்ம்ம்ம்

arasan said...

ம்ம்ம் .. அனுபவமா ? இருந்தாலும் சில வரிகள் அனைவருக்கும் பொருந்தும் ..

Kumaran said...

காலை வணக்கம், தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு முதலில் மன்னிக்கவும்.
சூப்பர் சகோ..ரொம்பவும் சுவாரஸ்யமான கவிதை..இன்னும் ரெண்டு மூன்று வரிகள் இருக்ககூடாதா என்று மனது கேட்டது..நன்றிகள்.தொடரட்டும் தங்கள் பணி.
சைக்கோ திரை விமர்சனம்

சௌந்தர் said...

காதல் என்பது...

பிரிவெனும் துயரத்தில்,

துளிர்க்கும்

கண்ணீர் துளியின்

முற்றுப்புள்ளியில்

முடிந்து போவது.///

இது நல்லா இருக்கு உண்மையும் கூட

NILAMUKILAN said...

நன்றி முத்துவேல்.

NILAMUKILAN said...

அரசன்.. யாருமே உலகத்தில் இந்த அனுபவம் இல்லாம இருக்க முடியுமா. நன்றி.

NILAMUKILAN said...

குமரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

NILAMUKILAN said...

நன்றி சௌந்தர். ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பிங்க போல இருக்கு.

Latest Tamil Cinema News said...

Wow Great

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...