Friday, March 9, 2012

டிராவிட்- பெருஞ்சுவரின் அந்திமம்.


இந்தியா பல போட்டிகளில் தோல்விகளை எதிர் நோக்கி இருக்கும் காலமெல்லாம், தனி ஒரு ஆளாய் நின்று, எதிராளிகளின் வெற்றியை தடுக்கும் ஒரு பெருஞ்சுவரை நின்று இந்தியாவுக்காக ஆடும் வீரர்களில், திராவிட் முதன்மையானவர்.

1996 இல் சிங்கப்பூரில் தனது கிரிகெட் வாழ்கையை துவக்கிய ராகுலுக்கு கிரிக்கெட் இரத்தின கம்பள வரவேற்ப்பை தரவில்லை.தடுமாறிய அவர், இங்கிலாந்து சுற்றுபயணத்தின் பொது அணிக்கு முக்கியமாக தேவைப்பட்ட அவர் அடித்த 95 ரன்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது. 1997 இல் சவுத் ஆபிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட்டில் இவர் அடித்த 143 மற்றும் 81 ரன்கள், இவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என நிரூபித்தது.

பல வேளைகளில் இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றிய பெருமை ராகுலை சாரும். 1999 உலக கோப்பை ஆட்டங்களில் இந்தியாவை இறுதி போட்டி வரை அழைத்து சென்ற பெருமை ராகுளுக்குத் தான். 491 ரன்கள் எடுத்து அவரே முதன்மையான பாட்ஸ்மானாக திகழ்ந்தார்.அதனாலேயே அவருக்கு அடுத்த உலக கோப்பை போட்டியின் அணித்தலைவராக இருக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. வெஸ்ட் இண்டீசில் நடந்த அந்த ஆட்டங்களில் இந்தியா சொதப்பி வெளியேறியதும், மற்றவர்கள் மேல் பழி போடாமல், தானே பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

2004 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 233 ரன்கள் அடித்து வெற்றி பெற்று தந்த டெஸ்ட் மாட்சை மறக்க முடியுமா.அந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட்களில் ராகுல் விளாசி எடுத்த மொத்த ரன்கள் 619. 2011 உலக கோப்பை வென்ற இறுமாப்பில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி நான்கு போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. திராவிட் மட்டுமே நான்கு போட்டிகளில் மூன்று செஞ்சுரி அடித்து தான் ஒரு சிறந்த பாட்ஸ் மான் என்பதை மீண்டும் பறை சாற்றினார். அவர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற முடியும் என உணர்ந்து அவரை அதுவரை ஒருநாள் போட்டிகளில் மறுதலித்து வந்த இந்திய தேர்வு குழு அவரை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை தேர்வு செய்தது.

மற்ற அனைத்து வீரர்களும் களம் விட்டு வெளியேறினாலும்,தனக்காக விளையாடாமல் இந்தியாவுகக நேர்த்தியாக விளையாடிய திராவிட், அவரது ஆட்டத்துக்கு ஏற்ப கவனிக்க படாது போனது, அவரின் துரதிர்ஷ்டம் அல்ல. அவரது விளையாட்டை உபயோகித்துக் கொண்டு அவருக்குரிய மரியாதையை தராமல் புறக்கணித்த இந்த தேசத்தின் அவலம் அது.


சச்சின் என்னும் சூறாவளியில் திராவிட் எனும் தென்றலின் இருப்பிடம் வெளியே தெரியவில்லை. திராவிட் செஞ்சுரி அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தாலும், சச்சின் அந்த ஆட்டத்தில் செஞ்சுரி அடிக்கவில்லையே என கவலைப்பட்டவர் தான் ஏராளம். சச்சினுக்கோ, செஹ்வாகிற்க்கோ கிடைத்த அங்கீகாரங்கள், சிறந்த வீராரான ராகுல் ட்ராவிடுக்கு கிடைக்காமல் போனதை பற்றி அவர் கவலைப்படவில்லை. என்னை போன்ற ராகுலின் ரசிகர்களுக்கு மிகுந்த மனவருத்தம் அளிக்கும் விஷயம் அது.

ராகுல் என்றுமே எந்த சர்ச்சைகளிலும் மாட்டாத ஒரு ஜென்டில்மேன். அவரது ஆட்டத்தை போலவே அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர் என்று அவரை பற்றி அவரது சக வீரர்கள் பாராட்டுவர். மற்றவர்களை பற்றி என்றும் கவலை பட்டதில்லை அவர். அணியின் தேவைக்கு ஏற்றது என்ன என்பதை உணர்ந்து அதனை என்னால் முடிந்தவரை அளித்ததை தான் பெருமையுடன் நினைவு கூறுவதாக, தான் ஓய்வு பெரும் இந்நாளில் அவர்  அறிவித்துள்ளார். ராகுல் ஓய்வு பெறுவதை அறிவித்ததும், அவருக்கான அங்கீகாரம் கிட்டாமலேயே ஓய்வு பெருகிறாரே என எனது தொண்டைக்குழிக்குள் எதோ ஒன்று அடைத்துக்கொண்டு பிதுங்கி கண்களில் முட்டிக் கொண்டு நின்றது நீர்.

We miss you dravid.

2 comments:

...αηαη∂.... said...

இனி டிராவிட் போல கிரிகெட்டை அதன் இலக்கணத்தோடும் அழகியலோடும் விளையாட கூடியவர்கள் யாரும் வரபோவதே இல்லை...

NILAMUKILAN said...

நன்றி ஆனந்த். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...