Friday, March 16, 2012

ஈழத்தின் அவலம்.

சனல் 4 தயாரித்துள்ள இலங்கை கொலை களங்கள் இரண்டாம் பாகம். மென்மையான இதயம் உள்ளோர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.




சனல் நாலு வெளிப்படுத்திய, ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வெறித்தாண்டவம், உடல் பதைபதைப்பை உண்டு பண்ணியது. பலருக்குள் தாமும் விடுதலை புலியாக மாறிடலாமா என உள்ளுக்குள்ளே ஒரு அக்கினி கனன்று கொண்டு இருக்கும். இந்த வெறியாட்டத்தை பின்னின்று நடத்திய இந்தியாவின் மத்திய அரசாங்கம், அமெரிக்கா ஐ நாவில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை எப்படி எதிர் கொள்ளபோவது என்று திருடனுக்கு தேள் கொட்டுவதைப் போல கையை பிசைந்து நின்று கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து விழித்து கொண்டுள்ள உலக சமூகம், அப்போது ஈழத்தில் இருந்து கேட்ட அவல குரல்களை உதாசீனப் படுத்தியதால் தானே இத்தனை பேர்கள் மாண்டார்கள்.. கொடுமைகளில் சிக்கி உழன்றார்கள். அப்போது எல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது உண்மைகள் வெளி வந்து நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பச்சோந்தி அரசியல் வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். காலை உணவை உண்டுவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்ட தமிழக தலைவரின் உண்ணாவிரதத்தை மறக்க முடியுமா? தனது அரசியல் நாற்காலிக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்று பம்மாத்தாக பிரதமருக்கு கடிதங்கள் மட்டுமே எழுதி கொண்டிருந்தார். பிரதமர் என்ன இவரது 'உடன்பிறப்புகளில்' ஒருவரா? இவரது கடிதம் கண்டு உணர்ச்சிவசப்பட?

ஒரு ராஜீவ் காந்தி என்ற இந்தியனின் கொலைக்காக ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை காவு கொடுத்தார்களே? அந்த ஒரு லட்சம் ஈழதமிழர்களுக்காக ஒரு லட்சம் இந்தியர்களாவது கண்ணீர் சிந்தி இருப்பார்களா? உலகம் வாழும் அனைத்து தமிழனும், நான் உட்பட, என்ன செய்து விட முடிந்தது. இந்தியாவை ஆண்ட அரசியல் வாதிகளை நோக்கி தான் நம் அத்துணை விழிகளும் இருந்தது. போரை இயக்கிய மத்திய அரசியல் வாதிகளையும் , தன குடும்பத்துக்காக, ஒரு லட்சம் மக்கள் மடிந்த போதும் கடிதம் மட்டும் எழுதி கொண்டிருந்த தலைவனையும் முதலில் குற்றவாளிகளாக்கி கைது செய்ய வேண்டும்.

தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே அரசியல் வாதி வைக்கோ மட்டுமே. வேறு எவனுக்கும் இலங்கை தமிழனின் வாழ்கையை பற்றி சிந்திக்கவும், அதனை பற்றி பேசவுமே அருகதை கிடையாது.

இருந்தாலும் தற்போதைய நிலையில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும், காங்கிரஸ் உட்பட, இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே குரலில் வேண்டுக்கோள் விடுத்துள்ளன. இத்தனையும் இந்தியா ஏற்க மறுத்து மாற்றி வாக்களித்தால், புவியில் உள்ள எந்த தமிழனும், தமிழின வரலாறும், ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும் மன்னிக்கவே மன்னிக்காது.

வாய்மையே வெல்லும்.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...