Thursday, February 26, 2015

மன்னிப்பு!

மன்னிப்பு
==========


மன்னிப்பு என்பது
வெறும்
வார்த்தையில்
தொக்கி நிற்கிறது!

மன்னிப்பு
கேட்கப்பட்ட
கணத்தைக் கடந்து
அந்த வார்த்தைக்கு
மதிப்பேதும்
இருப்பதில்லை.

மன்னிப்பு
வழங்கப்பட்ட நொடியில்
ஏற்படும் கர்வம்
சில நொடிகள் தாண்டி
நிலைப்பதில்லை!.

மன்னிப்பில்
பரிமாற்றப்படும்
கண்ணீர் துளிகளில்,
உப்புச்சுவை
தெரிவதில்லை!

எதிராளியின் இதயத்தில்
பாரத்தை ஏற்றிவிடும்
திருப்திக்காக
சிலசமயம்
மன்னிப்புகள்
கேட்கப்படுகின்றன

மன்னிப்பு
கேட்டுவிட்டதால்
தன மீதான குற்றச்சாயங்கள்
துடைக்கப்பட்டுவிட்டதாக
நம்பப்படுகின்றன .

தான்
மன்னிப்பு கேட்டுவிட்டதாக
பிறரிடம் சொல்லிக் கொள்ளும்
வாய்ப்புகளை
சில
மன்னிப்புகள் ஏற்ப்படுத்துகின்றன.

மன்னிப்பினால்
தற்காலிக நிம்மதி தவிர
ஆகக்கூடிய  காரியம்
வேறொன்றுமில்லை.

கேட்கப்பட்ட காலத்தை தாண்டிய
செயலில் இருக்கிறது,
உண்மையான மன்னிப்பின்
மதிப்பு .!

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய சிந்தனை...
அழகிய வரிகள்....

NILAMUKILAN said...

நன்றி!

Yaathoramani.blogspot.com said...


கேட்கப்பட்ட காலத்தை தாண்டிய
செயலில் இருக்கிறது,
உண்மையான மன்னிப்பின்
மதிப்பு .!

மிகச் சரி
ஆழமான கருத்துடன் கூடிய
அற்புதக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

NILAMUKILAN said...

நன்றி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...