Thursday, July 1, 2010

ஒரு இந்தியப் பயணம்.--1


வாஷிங்டன் டீ சி விமான நிலையத்தின் லவுஞ்சில் அமர்ந்து கீழிறங்குவதும் மேலேழும்புவதுமாக இருந்த அலுமினிய பறவைகளை கண்டு பரவசமாக இருந்தது. மூன்று வருடங்கள் கழித்து எனது இந்திய தேசத்து மண்ணை முத்தமிடப் போகிறேன் என்ற நினைவுகளும் ஒரு மாதத்துக்கு முன்னமே இந்தியா சென்று இந்திய வெய்யிலை பற்றி புகார் பத்திரம் வாசித்த எனது மனைவி மற்றும் மகனை பார்க்க போகிறேன் என்றும் சிலிர்ப்பாக இருந்தது.  இந்தியா வெகுவாக மாறி விட்டிருக்கிறது. சென்று பார் உனக்கே புரியும் என்ற எனது நண்பனின் சொல்லும், எனது இந்தப் பயணத்தை வெகுவாக பாதித்திருந்தது.

முதல் முதலாக கத்தார் விமானத்தில் பறக்க இருந்தேன். வாஷிங்கடனில் இருந்து பதினான்கு மணி நேர பயணத்தில் தோஹா சென்று அங்கு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னர் நாலரை மணி நேரப் பயணத்தில் பெங்களூரு. பின்னர் அங்கிருந்து சென்னை செல்வது தான் எனது பயண அட்டவணை. கத்தார் விமானத்தில் ஏறியதும் என்னை வரவேற்றது தாஜ்மஹால் சிலை போல (அதாங்க பளிங்கு சிலை) நின்றிருந்த அந்த அரேபியா பெண். பிரம்மாண்டமாக இருந்த அந்த விமானத்தில், உள்ளே சென்று அமர்ந்தேன். 

இருக்கைக்கு முன்னே பத்து இன்ச் தோடு திரை. பல திரைப்படங்கள் இருந்தது. எது வேண்டுமானாலும் அமுக்கி பார்த்துக் கொள்ளலாம். அதில், ஐந்தாம்படை மாசிலாமணி என சில மொக்கை தமிழ் படங்களும் இருந்தது. கால் நீட்டக் கூடிய அளவில் நல்ல லேக் ஸ்பேஸ் இருந்தது. பஞ்சையும் மிட்டாயும் கொண்டு வந்து கொடுத்தாள் விமானப் பணிப்பெண். முகம் துடைத்துக்கொள்ள இளஞ்சூடான தேங்காய் பூ துவாலையை கொடுக்க முகத்தில் ஒத்திக்கொண்டேன். சுகமாய்இருந்தது.


என் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் ஒரு இந்திய முகம் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தது. அவர் பெயர் ஸ்ரீநிவாசன். பூர்வீகம்ஐதராபாத்.

இருவரும் ஐ டி தொழிலில் இருந்ததால், 'நீங்க எந்த கம்பெனி நீங்க எந்த சாப்ட்வேர் ல வொர்க் பண்றீங்க...' ரீதியான அரட்டைக்குப்பின் இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளைப் பற்றி பேச்சு திரும்பியது. பெங்களூரு ஏர்போர்ட் மிக அழகாக இருப்பதான எனது சகோதரன் சொன்னதை அவரிடம் பகிர்ந்து கொள்ள அவரோ, இந்தியாவின் சிறந்த ஏர்போர்ட் ஐதராபாத்தின் ஏர்போர்ட் தான் என்று கூறி அதனை கட்டமைத்த முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடுவை பற்றி புகழ்ந்த அதே வேளையில், ' அவர் மாநிலத்தின் கிரீமி லேயர் எனப்படும் பணக்காரர்களின் வசதிக்கு மட்டுமே பாடுபட்டார் எனவும் விவசாயிகளுக்கு அவர் எதுவுமே செய்யவில்லையே' என நான் கேள்விப் பட்டதை சொன்னதும் அதற்க்கு காரணமாக அவர் சொன்னது என்னை யோசிக்க வைத்தது.

சந்திரபாபு முதல்வராக இருந்தபோது மழையே பெய்ய வில்லை. எங்கும் வறட்சி எதிலும் வறட்சி. ஆனால் ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி ஏற்றதும் மழையோ மழை. வளத்தை கொண்டு வந்த ராஜா என அவரை கொண்டாட ஆரம்பித்தனர் ஆந்திர விவசாயிகள். அவர் கிறித்துவர் என்பதால் அவர் மீது மத ரீதியான குற்றசாட்டுகள் இருந்தபோதும் மிகவும் எளிமையான முதல்வர் என்றும் எளிதில் அவரை அணுக முடியும் என்றும் மிக மிக எளிமையானவர் என்றும் சொன்னார். அவர் முதல்வரானதும் அவரால் மழை வந்தது என மக்கள் அவரை கொண்டாடினர் ஆனால் அந்த மழையே அவரது மரணத்துக்கும் காரணமாக அமைந்து விட்டதை சொல்லிவருத்தப்பட்டார்.

மெல்ல பேச்சு தமிழக அரசியல் பற்றி திரும்பியது. வழக்கமாக, ஒரு அரசியல் கட்சி தான் பெரும் சக்தியாக நிரூபித்துக் கொள்ள மாநாடுகள் நடத்துவது வழக்கம். உங்கள் மொழிக்காக மாநாடு நடக்கிறதாமே. எதற்கு? எனஸ்ரீநிவாஸ் கேட்டபோது நான் ராஜேந்திர குமார் நாவலில் வருவது போல ' ங' என விழிக்கக் ஆரம்பித்தேன்! ...


(பயணம் தொடரும்....)
--

4 comments:

Anonymous said...

"ஙப்போல் வளை” என தமிழ் சொன்னது. ஆனால் மொழிக்கான மாநாடு பற்றிய அவரது கேள்விக்கு //ங' என விழிக்கக் ஆரம்பித்தேன்!// என சொல்லியிருக்கிறீர்கள். பதில் சொல்லத்தெரியாத உங்கள் இயலாமை வருத்தத்தோடு ஏமாற்றமுமளிக்கிறது..!

Mythili said...

Hi me the first"..
very interesting post, waiting for your next post.

ராம்ஜி_யாஹூ said...

me the 3rd, welcome to chennai, chennai welcomes u

ஹேமா said...

முகிலன்..முழிச்சாலும் விடமாட்டீங்க.கண்டிப்பா உங்களுக்குத் தெரிஞ்சதை
வச்சுச் சமாளிச்சிருப்பீங்க.
தொடருங்கோ.பாக்கலாம் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...