Friday, October 8, 2010

பிறிதொருநாளில்...!

சாயம் தொலைந்த சுவர்கள்,
காரை பெயர்ந்த தரை,
மழை நீர் ஒழுகும் கூரை,
கருப்பு தொலைத்த பலகை,
இலை உதிர்த்த போகன்வில்லா ,
இறந்து போன வாத்தி..
பொம்மியம்மா விற்கும் கார நில்லிக்காய்...
ரொட்டிக்கடை அண்ணாச்சி..
கிச்சாமி எட்டிப் பார்த்து மாட்டிக் கொண்ட..
பெண்கள் கழிப்பறை,
கட்டிப்புரண்டு சண்டையிட்ட மைதானம்...
திருட்டு தம்மடித்த முள் புதர்...
என...
எதுவும் சிலிர்ப்பைத் தரவில்லை...!
பிறிதொருநாளில்...
என் மகனின் கரம் பிடித்து அழைத்து சென்று...
என் நினைவுகள் பகிரும் வரை...!
--

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...