Sunday, July 19, 2009

உலக சினிமா : The Kite Runner (தி கைட் ரன்னர்)

இந்த பதிவை வெளியிட்ட விகடனுக்கு நன்றி.
(youthful.vikatan.com).




ஆப்கனிஸ்தானில் காபூலில் வாழும் சிறுவர்கள் பணக்கார ஆமிரும் அவனுடைய உயிர் நண்பனான ஏழை ஹசனும். பணக்கார ஆமிரின் குடும்பத்துக்கு சேவகம் புரிந்து வருகின்றனர் ஹசனும் அவன் தந்தை அலியும்.

ஆமிர் பள்ளி செல்கிறான். ஏழ்மை காரணமாய் பள்ளியில் படிக்க வில்லை ஹசன். என்றாலும் தனது நண்பனை கதைகள் படிக்க சொல்லி கேட்டு மகிழ்கிறான். ஹசனுக்கு நண்பனான ஆமிர் உலகம். அவனுக்காக உயிரையும் விடுவான் ஹசன். ஆமிரின் பணக்கார தந்தையான பாபாவுக்கு ( அப்படி தான் ஆமிர் அழைக்கிறான். பாபா என்றால் அப்பா என அர்த்தம்) தச்சனின் மேலும் பிரியும் அவர்கள் திரைப்படம் பார்க்கும் வேளை எல்லாம் ஹசனையும் அழைத்து செல்வார். அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பிடித்த பட்டம் வாங்கி கொடுப்பார்.

ஆமிரின் கோழைத்தனம் அவருக்கு சிறிதும் பிடிப்பதில்லை. அவனுக்கு முன்பாக ஹசனை உயர்வாக பேசுவார். தனது தந்தை தன்னை வெறுக்க காரணம், தான் பிறந்த போதே தனது தாயும் இறந்ததால் தன்னால் தான் தாய் இறந்து விட்ட வெறுப்பு அவருக்கு இருக்கிறது என நினைக்கிறான் ஆமிர்.
ஆமிரின் எழுத்து திறமைக்கு அவனுக்கு ஆறுதலாக இருப்பது பாபாவின் நண்பரான ரஹீம் கான்.

ஹசன் ஹஜாரா என்ற இனத்தை சேர்ந்தவன். அந்த இனத்தை சேர்ந்தவர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் அவர்களை வழி மறித்து ராக்கிங் செய்கிறது. அப்போது தன்னிடம் இருக்கும் உண்டிவில் கொண்டு அவர்களை விரட்டுகிறான் ஹசன். அந்த கூட்டத்தின் தலைவன் அஸ்ஸெப். ஹசனை பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருக்கிறான்.

காபூலில் மாஞ்சா பூசிய பட்ட திருவிழா வருகிறது.பட்டம் விடுவதில் புலி ஹசன். அவனுடைய உதவியால் பட்ட திருவிழாவை வெல்கிறான் ஆமிர்.தன தந்தையிடம் இருந்து பாராட்டும் பெறுகிறான். ஹசன் அவனை வாழ்த்தி விட்டு அவனுடைய பட்டதினால் அறுபட்ட நீல நிற பட்டம் விழுந்த இடத்தை அறிந்து அதனை கொண்டு வந்து செர்பிப்பதாக கூறி செல்கிறான்.

அவனை காணாமல் தேடி புறப்படுகிறான் ஆமிர். அவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அவன் ஆஸெப்ப் கூட்டத்திடம் மாடி கொண்டதை அறிந்து ஒளிந்து கொண்டு நடப்பவற்றை கவனிக்கிறான்.
அந்த பட்டத்தை தந்துவிடுமாறு ஆஸெப்ப் அவனுடைய ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறான். அதற்க்கு அது தான் தனது நண்பன் ஆமிருக்கு கொண்டு வந்து தருவதாக வாக்களித்துவிட்டதாகவும் உயிர் போனாலும் அதனை தரப்போவதில்லை என்றும் ஹசன் கூற அவனை அடித்து அவனை வன்புணர்ச்சி செய்து விடுகிறார்கள் ஆஸெப்பும் அவன் நண்பர்களும்.

அதனை கண்டு அஞ்சுகிறான் ஆமிர். வீட்டிற்கு வந்ததும் தான் ஹசனை காப்பாத்த முடியாமல் போன கையாலாகாத தனத்தை எண்ணி வருந்துகிறான். ஹசன் நோய்வாய் படுகிறான்.

ஹசனை பார்க்கும்போதெல்லாம் தனது கோழை தனத்தை எண்ணி பார்க்கும் ஆமிர் அவனை வீட்டை விட்டு துரத்த திட்டம் போடுகிறான்.தந்தை இடம் சொல்லி பார்த்தும் அவர் கேட்காததால், தனது கைகடிகாரத்தை ஹசனின் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டு அவன் மேல் திருட்டு பட்டம் கட்டுகிறான்.ஹசனும் தனது நண்பனின் செயலை உணர்ந்து அவனை காப்பாற்ற திருட்டு பட்டத்தை ஏற்றுக் கொள்கிறான். பாபா அவனையும் அவன் தந்தை அலியையும் அழைத்து இதை பற்றி விசாரித்து தான் அவர்களை மன்னித்து விட்டதாக கூறியும், அலி திருட்டு பட்டத்தை சுமந்து கொண்டு தானும் தனது மகனும் அங்கு மேலும் வேளை செய்வது இயலாத காரியம் என கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானை ரஷ்ய படைகள் சூழ்ந்து கொள்ள தனது மகனை அழைத்து கொண்டு திருட்டுத்தனமாக தப்பித்து பாகிஸ்தான் வந்து சேரும் பாபா தனது நண்பன் ரஹிம்கானை தனது வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அமெரிக்க வந்து வசிக்கிறார். தனது மகனை படிக்க வைத்து பட்டம் வாங்க வைக்கிறார். தனது மகன் ஆசைப்பட்ட பெண்ணை மணம் முடித்து வைத்து விட்டு இறந்து போகிறார்.
ஆமிர் தனது வாழ்கையை புத்தகமாக எழுதி தனது கதைகளை சிறு வயதில் அங்கீகரித்த ரகீம் கானுக்கு சமர்பிக்கிறான்.

அப்போது பாகிஸ்தானிலிருந்து ரஹீம் கான் தொலை பேசி அவனை அங்கு அழைக்கிறார். அங்கு செல்லும் அமீரிடம் உண்மை ஒன்றை கூறுகிறார் ரஹீம். அதாவது ஹசன் அமிரின் தந்தைக்கு பிறந்தவன் என்றும் அலி ஆண்மையற்றவன் என்றும் கூற அதிர்ச்சி அடைகிறான் ஆமிர். பாபா ஹசனின் மீது பாசம் கொண்டு இருந்தமைக்கு அவனுக்கு காரணம் விளங்குகிறது.

மேலும் அவனது வேட்டை ஹசன் தான் பார்த்துகொண்டிருந்தான் என்றும் அந்த வீட்டை காப்பதற்காக அவனும் அவன் மனைவியும் உயிர் துறந்த கதையும் அவன் மகன் சோரப் அநாதை ஆக்கப்பட்ட கதையும் இப்போது சொரப்பை ஆமிர் காபுல் சென்று காப்பற்றி கொண்டு வரவேண்டும் என்றும் ரஹீம் கான் கூறுகிறார்.

தான் ஹசனுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேட இதுவே கடைசி வாய்ப்பு என்று உணரும் அமீர், ஒரு வீரனாக அப்போது தாலிபானின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு சொரபை காப்பாற்ற புறப்படுகிறான்.பல இன்னல்களுக்கு பிறகு சொரபை கண்டுபிடிக்கும் அமீர், அவன் ஹசனை வன்புணர்ச்சி செய்த ஆசெபின் பிடியில் இருப்பதை அறிகிறான். அவனிடம் இருந்து சொரபை காப்பற்றி அமெரிக்க கொண்டு வந்து தனது மகனாக வளர்த்து வருகிறான். சொரபுக்கு தன் நண்பன் கற்று கொடுத்த பட்டம் விடும் வித்தையை ஆமிர் கற்றுகொடுக்க படம் முடிகிறது.

நட்புக்காக எதையும் செய்யும் சிறந்த நண்பனை ஹசனின் பாத்திரம் காட்டுகிறது. சிறுவயது ஹசானாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அற்புதம். அமிராக நடித்திருக்கும் காலித் அப்துல்லாஹ் இயல்பாக அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தின் இசை ரம்மியம். ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இசை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அமெரிக்க என எல்லைகளுகேற்ற கலாச்சாரத்துக்கு ஏற்ப உருகி வழிகிறது.

படத்தில் எனக்கு பிடித்த வசனம், பாபா அமிரை பார்த்து சொல்வது.
"இவ்வுலகில் திருடுதல்தான் அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. நீ பொய் கூறினால் எதிராளியின் உண்மையை அறியும் உரிமையை நீ திருடுகிறாய். அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டால், அவனிடமிருந்து நீ அவன் மனைவியை திருட பார்க்கிறாய். கொலை செய்ய ஆசைப்பட்டால், அவனுடைய உயிரை நீ திருட நினைக்கிறாய். ஆகவே உலகின் குற்றங்களுக்கெல்லாம் அடிப்படை திருட்டு தான்.

சில செயற்கை தனங்கள் இருந்தாலும் படத்தின் இயக்குனர் மார்க் பொர்ஸ்தெர் ஒரு உயிர்த்துடிப்பான படத்தை அளித்துள்ளார்.

கைட் ரன்னெர், நட்புக்கு இலக்கணம்.

4 comments:

ரவி said...

நல்ல படம் இது....

NILAMUKILAN said...

உங்கள் கருத்துக்கு நன்றி ரவி.

மாதேவி said...

படம் பற்றிய உங்கள் தகவல்களுக்கு நன்றி.

Senthil said...

nice review!

going to watch today

senthil,doha

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...