Monday, November 2, 2009

உலகின் மிகப்பெரிய கப்பல் - ஓயாசிஸ் ஒப் தி சீஸ்



மனிதனின் ஆசைக்கு எல்லை ஏது. ஒன்றை ஒன்று மிஞ்ச வேண்டும் என முனைப்புடன்,மனிதத்தின் சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதோ உலகத்தின் மாபெரும் கப்பலான 'ஓயாசிஸ் ஆப தி சீஸ்' தனது பயணத்தை துவக்கி உள்ளது. கப்பலின் படங்களையும் செய்திகளையும் பார்த்தால் ஒரு சிறு ஊரையே கப்பலில் உள்ளடக்கி உள்ளார்கள் போல தெரிகிறது.

-கப்பலின் எடை இரண்டு லட்சத்தி இருபதாயிரம் டன்.
-150 மைல்கள் நீளமுள்ள பைப்புகளை பயன்படுத்தி உள்ளனர்.
-3,300 மைல்கள் நீளமுள்ள மின்சார ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-2,300 டன் தண்ணீர் இதிலுள்ள 21 நீச்சல்குளங்கள் மற்றும் ஜக்குசிகளில் பயன்படுத்தப்படுகிறது .
-இந்த கப்பலில் உள்ள சென்ட்ரல் பார்க் தான் உலகிலேயே கப்பலில் கட்டப்பட்டுள்ள உண்மையான பூங்கா. மொத்தம் 12,275 செடிகளும் 56 மரங்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளது. சென்ட்ரல் பார்க் கப்பலில் உள்ள ஒரு அறை

-5400 பேர் ஒரே சமயத்தில் இதில் பயணம் செய்யலாம்.
-கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன..(அம்மாடீ...)
-ஏழு குறு நகர்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
-இரண்டாயிரத்து எழுநூறு அறைகள் உள்ளன.
அக்வா திறந்த வெளி அரங்கம்.

-திறந்த வெளி அரங்கம் உண்டு (கடலலைகளை கேட்டவாறு டைட்டானிக் -திரைப்படம் பார்த்தால் ஒரு பய பயப்படாம இருக்கமாட்டான்.)
-பதினோரு விடுதிகளும் ஏழு நீச்சல் குளங்களும் உண்டு.
குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்.

அதெல்லாம் சரி.. விலை எவ்வளவுன்னு கேக்கறிங்களா...? நம்மால முடிஞ்சது படத்த பாத்து பெருமூச்சி விடுவது தான். அத நான் செஞ்சிட்டேன். அப்ப நீங்க......?
-----

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...