Thursday, November 19, 2009

அன்றும் இன்றும்....யூத்புல் விகடனுக்கு நன்றி.


அன்று...
நாங்கள்
சீறும் சிங்கங்களாக
வீறு கொண்டு எழுந்த போது
எங்கள்
மயிர்க்கால்களை
மழித்து விட்டீர்கள்...

அன்று...
நாங்கள்
வானம்பாடிகளாக
விண்ணில் பறக்க முனைந்தபோது
எங்கள்
சிறகுகளை சிரைத்துவிட்டீர்கள்...

அன்று ....
நாங்கள்
அநீதி கண்டு பொங்கி
கோஷமிட்டபோது
எங்கள்
குரல் வளைகளை
அறுத்து எறிந்தீர்கள்...

இன்று...
புழுபூச்சிகள் தின்றுவிட்ட
எங்களின்,
புகைப்படங்களுக்கு
மாலைகள் அணிவித்து
'தியாகி' என ஒளி ஏற்றுகிறீர்கள்..!

-----

6 comments:

பா.ராஜாராம் said...

மிக அருமைங்க.

NILAMUKILAN said...

நன்றி ராஜாராம்.

Paul said...

மிக அருமை..

NILAMUKILAN said...

நன்றி அருணா மற்றும் பால்.

ஹேமா said...

வாவ்..முகிலன் மனம் நெகிழ வலியோடு இப்படியொரு கவிதை அற்புதம்.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...