Friday, April 30, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-4-லிவிங் டுகெதர்...!



நான் மேகா...!

கலாச்சாரத்தை கேடுத்துவிட்டதாய் அனைவரும் திட்டிக் கொண்டிருக்கும் ஐ டி கம்பெனி ஒன்றில்  ப்ராஜெக்ட் மானஜர். கை நிறைய சம்பளம்.
நான் ஐந்து வருட ரணகள மண வாழ்க்கைக்கு பின்னர் விவகாரத்து பெற்று விட்ட நடுத்தர வயதுப்பெண்.

என் மணவாழ்க்கையின்  போது நான், என் கணவன் என்கிற சைக்கோவால் எதிர்கொண்ட சவால்களை, பிரச்சனைகளை துக்கங்களை, பகிர்ந்து கொள்ள, ஆறுதல் தர, திரும்பி கூட பார்க்காத சமூகம் இப்போது என் மீது அக்கறை கொண்டு,  நான், திருமணம் செய்து கொள்ளாமல் மணியோடு தனியாக அந்த அப்பார்ட்மென்ட்டிற்கு குடியேறியபோது என்னை திட்டி தீர்த்தது.

மணியுடன் நான் அந்த அப்பார்ட் மென்டில் தங்க கூடாதாம். அது அந்த அப்பார்ட்மென்ட் சமூகத்திற்கு நான் விளைவிக்கும் ஊறாம்.

என்ன வென்று சொல்வது. ஆறுதலின்றி தவித்த, தவிக்கும் எனக்கு ஒரே துணை இப்போது மணி ஒருவனே.

அவன் வேலைக்கு செல்வதில்லை. நானே கை நிறைய சம்பாதிப்பதால், அதற்க்கு அவசியம் என நானும் கருதவில்லை.

மணியின் அன்பும் அவனது அண்மையும் எனக்கு இருந்தால் போதும். நான் வீடு திரும்ப காத்திருக்கும் ஒரே ஆள் அவன்தான். நான் இல்லையென்றால் என்னைப்பற்றி கவலைப்பட இருக்கும் ஒரே ஜீவனும்அவன்தான்.


நான் கொஞ்சுவதும் அவனைத்தான் திட்டுவதும் அவனைத்தான்

அக்கம் பக்கம் குழந்தைகளுக்கெல்லாம் இவனது முரட்டு தோற்றம் கண்டு பயம். இவனுக்கு கோவம் வந்து கத்தினால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்பதால் அவர்கள் அடிக்கடி என்னிடம் கம்ப்ளைன் செய்வதுண்டு. நான் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன்.

அவனுக்கு பொறுமை உணர்ச்சி இருப்பது போல பொறுப்பு உணர்ச்சி இல்லை. எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது இல்லை. எனக்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அவன் அதை பொருட்படுத்துவது இல்லை. உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் தராமல் இருக்கவேண்டும்.

நான் மிகவும் அயர்ச்சியுடன் வீடு வரும் நேரம், வீட்டின் பொருட்கள் எல்லாம் அங்கங்கே கலைந்து கிடந்தால் எனக்கு மிகவும் கோவம் வரும். அவனை திட்டும்போது அது தவறென தெரிந்தால் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொள்வான். பதில் பேசமாட்டான். அனால் இதுவே வேறு யாராவது என்றால் கத்தி குமித்து விடுவான்.

இன்றும் அப்படி தான், பெரிய சச்சின் டெண்டுல்கர் என்ற நினைப்பு. வீட்டில் கிடந்த பந்தை எடுத்து விளையாடிய விளையாட்டில், வீடே தலை கீழாக கிடந்தது.

நான் போட்ட சத்தத்தில் பாவமாக என்னை பார்த்தான். எனக்கு கோவம் பறந்து போக, அவனுக்கு பால் சாதம் பிசைந்து கொடுத்தேன்.

வாலாட்டி கொண்டே உண்ண ஆரம்பித்தான், என் நன்றியுள்ள செல்ல நாய்  மணி.

5 comments:

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//என் நன்றியுள்ள செல்ல நாய் மணி. //

இப்படித்தான் நிறைய பேருக்கு தேவைப்படுகிறதோ..!

ஆட்காட்டி said...

எதிர் பார்த்த முடிவு.

Sharah said...

Really Good...

Unknown said...

choo...sweet,Love should not be wasted in you life anymore.Love some one rightaway......

சாமக்கோடங்கி said...

முதலிலேயே விளங்கி விட்டாலும், நல்ல நடை.. சமுதாயத்தின் மனநிலையையும் நன்கு அலசி உள்ளீர்கள்.. நன்றி..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...