Thursday, April 29, 2010

கடந்து போன கவிதை!

என்றோ படித்த நாவலை,
மீண்டும் துவக்குதல் போல்,
உறங்கிப்போன குழந்தையின்
கண்விழிப்பு அழுகை போல்...
குடை மடக்கிய பின்,
துவங்கும் மழையை போல் ,

முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....
உனக்கெனதாகிய
எனது அடுத்த காதல்...

முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....


-- நிலா முகிலன்
--

12 comments:

ஹேமா said...

முகிலன்....நீங்களுமா !
இருக்கிறவங்களையே
சமாளிக்க முடில !
"கடந்துபோன கவிதை"ன்னு
அழகா தொடங்கியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

முகிலன்

:)

வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு மக்கா.

பத்மா said...

அருமை முகிலன்
முற்றுப்புள்ளியே வைக்காதீங்க காதலுக்கு .
வாழ்த்துக்கள்

NILAMUKILAN said...

நன்றி ஹேமா. நீங்களுமான்னா என்ன? கூட்டத்தோட சேத்து என்னையும் சமாளிங்க!

NILAMUKILAN said...

நேசமித்திரன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

NILAMUKILAN said...

நன்றி பா ரா.

NILAMUKILAN said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....//

காதல் எப்போதும் முடிவதில்லை,
ஆட்களும் பொருளும்தான் மாறுகின்றன,
தொடருங்கள் உங்கள் கவி மழையை..

sathishsangkavi.blogspot.com said...

//முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....//

அழகா இருக்குங்க வரிகள்....

NILAMUKILAN said...

நன்றி தமிழ் வெங்கட்.

NILAMUKILAN said...

நன்றிங்க சங்கவி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...