Friday, March 5, 2010

இலவசம்!




கடந்த சில நாட்களாக, ஊடகங்களும் பதிவர்களும் நிதயானந்த சுவாமிகளை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டது அவர் மட்டுமல்ல. அவரை கடவுளாய் வணங்கிய பக்தர்களாகிய மக்களும் தான். ஆனால் அவரது தியான உத்திகள் மற்றும் யோகாவினால் பயனுற்ற மக்கள் ஏராளம். அதில் என் நண்பர்களும் அடங்குவர். அவர் கற்று கொடுத்த தியானங்கள் மற்றும் யோகாவை மற்றும் பயன் படுத்துவோரை, இது அவ்வளவாக பாதிக்க வில்லை. இருந்தாலும் காசு பார்க்கும் நோக்கில் தொலைகாட்சிகள் அந்த கரும கன்றாவியை குழந்தைகளும் தொலைகாட்சிகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து, டி ஆர் பீ ரேட்டிங்கை மட்டும் குறி வைத்து அறமின்றி நடந்து கொண்டது மிகவும் கேவலம். பதிவர்கள் அனைவரும் அவரை பற்றி எழுதி வருவதால் எனக்கு எழுத ஒன்றும் இல்லை.

இருந்தாலும் என்னை மிகவும் பாதித்தது, உத்தர பிரதேசத்தில் ஒரு ஆலயத்தில், இலவச பிரசாதம் மற்றும் துணி மணிகள் பெற்றிட முண்டியடித்து வாங்க எத்தனித்து 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உட்பட 65 பேர் பலியானது தான் என்னை உலுக்கியது. நித்யானந்தர் யாரோ ஒரு நடிகையுடன் புரளும் காட்சியை ஒளிபரப்பு செய்து காசு சம்பாதிக்க ஊடகங்கள். மனித உயிர்கள் மாண்டு போனதுக்கு முக்கியத்துவம் தராது போனது ஏன்?

இலவசமாக தருகிறார்கள் என்றால் முண்டியடிக்கின்றனர் மக்கள். இதே போல் தமிழகத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய நிகழ்விலும் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்இழந்தது
நினைவிருக்கலாம். இதற்க்கு காரணம் என்ன? இலவசம் என்றால், வசதி படைத்தவர்கள் கூட ஓடி பொய் 'சும்மாதானே' என வரிசையில் நிற்பது இந்தியர்களுக்கே உரிய ஒரு குணமாக மாறி போனது. இதற்க்கு அரசியல் வாதிகளும் ஒரு காரணம் தான். ஒட்டு வங்கிக்காக குறி வைத்து இலவச டி வீ ஒட்டு பொட பணம் பொருள்கள் இத்தியாதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவது தான் இவர்களது குறிக்கோள். இன்னும் இலவச அடுப்பு, இலவச நிலம், ஏன் இலவசமாக ஒரு ஏழைக்கு எம் எல் எ சீட் கொடுங்களேன்பார்ப்போம்.

இலவசங்களை கொடுத்து ஏமாற்றாமல், அவர்கள் உழைத்து வாழ ஏன் இவர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில்லை. ஒவ்வொரு இடைதேர்தலிலும் தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அல்லது அவர்களை மிரட்டி, அல்லது அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறது. இதனால் திருவாளர் பொது ஜனம் தனது தொகுதி எம் எல் எ அல்லது எம் பீ எப்போது மண்டையை போடுவார் எப்போது இடைதேர்தல் வரும் என காத்திருக்க ஆரம்பித்து விட்டான்.

ஏழைகளுக்கு தானே இலவசம் என சிலர் வாதிட வரலாம். இலவச பொருட்கள் வாங்குவோர் அனைவரும் ஏழைகள் தானா? தன வீட்டில் இரண்டு டி வீக்கள் இருக்கும் நபரும் , அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழாவில் வரிசையில் முண்டி அடித்து கொண்டு நிற்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு குடும்பம் ஏழையாக இருக்க காரணம், சரியான வேலை வாய்ப்பு இல்லாதது. அவர்கள் வேலை செய்ய வேலை கொடு, அல்லது அவர்கள் தொழில் செய்ய கடன் கொடு. அதனை விட்டு இலவசம் கொடுத்தல், அவனுக்கு உழைப்பில் நாட்டம் இருக்குமா? அவன் இப்போது கிடைக்கும் சலுகைகளை அனுபவித்து உழைக்க மறந்து அவனது சந்ததியினருக்கு சொத்து சேர்க்க தவறி போனால், அவனது சந்ததியே அழிந்து போகும் அல்லவா.

அரசியல் வாதிகளுக்கு மக்கள் முக்கியமல்ல. அவர்கள் கையில் இருக்கும் ஒட்டு தான் முக்கியம். அதற்காக நித்யானந்தர் செய்யும் வேலைகளை விட கீழ்த்தரமாக அல்லவா செய்கிறார்கள். மற்றவன் தப்பு செய்தால் கூவி கூவி கூறும் இவர்கள், காசு கொடுத்து ஒட்டு வாங்குவதும் விபச்சாரம் அல்லவா? பொன்னாகாரம் இடைதேர்தல் வருகிறது. இதற்க்கு மூவாயிரம் ரூபாய் தட்டோடு ஒவ்வொரு வாக்காளன் வீட்டுக்கும் சென்று அன்பளிக்க கட்சிகள் தயாராக வருகிறது என படித்த பொது மக்கள் மேல் தான் கோவம் வந்தது. வாங்குகிறவன் இருக்கும்போது தானே கொடுப்பவன் தயாராகஇருக்கிறான்.

எதையும் சும்மா கொடுத்தால் முண்டியடித்து நிற்பதை நமது மக்கள் கை விட வேண்டும். உழைத்து உண்பதை உணரவேண்டும். இலவசம் தரும் கட்சிகளை ஒதுக்க வேண்டும். உழைப்பை சொல்லும் கட்சியை ஆதரிக்க வேண்டும். இல்லையேல் உத்தரப்ரதேச நிகழ்வுகள் போல இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கும்.
-

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...