Sunday, March 28, 2010

பென்னாகரம்...!



பென்னாகாரம் இடைதேர்தலில்குடம்,பணம்,வெள்ளி, தங்கம் என லஞ்சம் கொடுத்து ஒட்டு வாங்கும் கட்சிகளின் சதி ஒரு அளவு முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதற்க்கு முழு முதல் காரணம், தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா. இதன் மூலம் பண நாயகத்தை ஓரளவு வென்று ஜன நாயகத்தை நிர்மாணித்திருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு எண்பத்தைந்து விழுக்காடுகள் ஓட்டுகள் பதிவாகி உள்ளமை, மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை காட்டுகிறது. ஒட்டு போடுவது தங்களது கடமை என உணர்ந்தது தான் காரணம். அந்த எண்ணத்தை. விதைத்த, தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பலருக்கு பாராட்டுகள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்காம் கொண்டு தேர்தல் பூத்களை கண்காணிப்பது இதுவே முதல் தடவை. இது கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த உதவும். அரசியல் வாதிகளின் மொள்ளமாரித்தனங்களை வெட்ட வெளிச்சமாக்க பதிவு செய்யப்பட அந்த ஒளி நாடாக்கள் உதவும் என்பதால். தப்பு செய்ய அரசியல் வாதிகள் நிச்சயம் பயப்படுவார்கள்.
இருந்தாலும்
லாரிகளில் புடவை வேட்டிகள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் பணப் பட்டுவாடா ரகசியமாக நடந்ததாக கூறப் படுகிறது. என்னதான் தேர்தல் கமிஷன் விழிப்பாக இருந்தாலும், ஜன நாயகத்தை கொழிதொண்டி புதைக்க இது போல சில அரசியல்வாதிகள் மற்றும் வாங்க மக்களும் இருப்பது வரை தேர்தல் நிச்சயம் ஒரு கண் துடைப்பாக தான் இருக்க இயலும்

----

1 comment:

Subu said...

இப்ப லேட்டஸ்டு நிலமை என்னாண்ணே ...அதை சொல்லிபோடுங்க !! ஆவலா காத்துக்கிட்டு இருக்கோமில்ல

மேலும் :

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...