Thursday, March 11, 2010

செல்லு போனு கொல்லு(ம்) போனு -ஒரு ஜாலி கானா..!


இதனை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.


டவுசர் கூட போட மறந்து
டவுனுக்குள்ள அலைவான்.
தம்மாதூண்டு செல்லுபோனு தான்
டவுன் ஆச்சினா அளுவான்.

சாவக் கெடக்கற பெருச கூட
சாவட்டும்னு விடுவான்.
சார்ஜ் இல்லாத செல்லுபோனுக்கு
டாப் அப் பண்ண அலைவான்.

ஓடி ஒளச்ச அப்பனுக்கு
கை கால் அமுக்க நோவும்.
ஒரு வார டாவுக்கு
எஸ் எம் எஸ் அனுப்ப ஏங்கும்

நீயும் அவளும் பாக்கறதுக்கு
செல்லு 'மேட்டர' பதியும்.
ரூமுக்குள்ள நடப்பத பாத்து
ஊரு பூரா சிரிக்கும்.

செல் போன் இல்லா காலத்துல
நிம்மதியா இருந்த..
'செல்'லரிச்சு இந்த நாளு
ஆத்தாளையும் மறந்த...

-- நிலா முகிலன்

6 comments:

நீச்சல்காரன் said...

நல்லாயிருக்கிறது
இன்னும் அதிக வரிகளை எழுதியிருக்கலாமோ என தோனுகிறது

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

மசக்கவுண்டன் said...

ரொம்ப நல்லா இருக்குதுங்க.

NILAMUKILAN said...

நன்றி நீச்சல்காரன்

NILAMUKILAN said...

நன்றி மதுரை சரவணன்.

NILAMUKILAN said...

நன்றி மசக்கவுண்டன். நீங்க கோயம்புத்தூரா.?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...