Saturday, April 24, 2010

உலக சினிமா: சின் நோம்ப்ரே (Sin Nombre) ஸ்பானிஷ் : புலம் பெயர்தலின் வலி.

புலம் பெயர்தல் என்பது, இலங்கையில் மட்டுமல்ல. இன்னும் பல நாடுகளில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உடமைகள், உறவுகள் எல்லாம் துறந்து, சேர்வோமோ சேர மாட்டோமா என்ற நம்பிக்கையற்று இன்னமும் ஒரு நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்து கொண்டு இன்னொரு நாட்டிற்க்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன பல ஜீவன்கள். சிலருடைய கதைகளையும், சில திரைப்படங்களையும் பார்த்தால், நமது வாழ்கை மிக மிக சுகமானதாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் தோன்றும். என்னை அப்படி யோசிக்கவைத்த திரைப்படங்களில் ஒன்று சின் நோம்ப்ரே என்ற இந்த இஸ்பாநியோல்திரைப்படம்.

காஸ்பர், ஹோண்டுராஸ் தீவில் உள்ள ஒரு காங் கிடம் வேலை செய்கிறான். அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். அவர்களின் அடையாளமாக சில சைகை மொழிகள், டாட்டூ என இருக்க, அவர்களின் தொழில் கொலை செய்வது கொள்ளை அடிப்பது. அவர்களிடம் ஸ்மைலி என்ற சிறுவனை சேர்த்து விடுகிறான் காஸ்பர். 


காஸ்பருக்கு மார்த்தா எனும் காதலி. அவளின் மேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவனுடைய காங்கின் சந்திப்பு ஒன்று கல்லறை ஒன்றில் நடக்கிறது. அதனை காண வரும் மார்த்தாவை வெளியே கூட்டி சென்று விடுவதாக கூறி அந்த காங்கின் தலைவன் லில் மங்கோ அவளை தனியே அழைத்து சென்று அவளை கற்பழிக்க முயல அவள் தப்பிக்கபார்க்க அப்போது நடக்கும் களேபரத்தில் அவள் ஒரு கல்லறையில் மோதி இறந்துவிடுகிறாள். லில் மங்கோ இதனை காஸ்பெரிடம் கூறி கேசுவலாக வேறொரு பெண்ணை தேடிக்கொள்ளும்படி சொல்ல, கஸ்பாரின் ஆத்திரம் அழுகையாக வெடிக்கிறது.

லில் மங்கோ, காஸ்பரையும் ஸ்மைலியையும், அமெரிக்காவிற்கு புலம் பெயரும் கீழ் நாட்டினர் பயன்படுத்தும் ரயில் செல்லும் லா பாம்பில்லா என்ற இடத்துக்கு கூட்டி வருகிறான். அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக செல்லும் கூட்டத்தில் இருக்கும் பதின் வயது சைரா தனது தந்தை மற்றும் மாமாவுடன் நியூ ஜெர்சி இல் இருக்கும் தங்களது சொந்தங்களை தேடி சென்று கொண்டிருக்கிறாள். அந்த கூட்டத்திடம் கொள்ளையடிக்க துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வரும் இவர்கள் சைராவையும் காண கண்டதும் லில் மாங்கோ அவளது அழகில் மயங்கி அவளை கற்பழிக்க முயல்கிறான். ஏற்கனவே தனது காதலியை கொன்ற லில் மங்கோ வை அரிவாளால் வெட்டி கொலை செய்து ட்ரெயினில் இருந்து தூக்கி எறிகிறான் காஸ்பர். ஸ்மைலியை ஊருக்கு போக சொல்லும் அவன், அதே ரயிலில் தன பயணத்தை தொடர்கிறான். தன்னை காப்பாற்றிய காஸ்பரின் மேல் சைராவுக்கு ஈடுபாடு வர அவனுக்கு உதவி செய்கிறாள். தன தகப்பன் மற்றும் மாமாவை நம்பாத அவள் அவனை முழுமையாக நம்புகிறாள். அவர்களது பயணம் பல இடர்களுக்கு நடுவே தொடர்கிறது. ஏற்கனவே தங்களது காங் உறுப்பினர்களை நாடு கடத்திய அனுபவம் உண்டென்பதால் காஸ்பர் சைராவுக்கு உதவி செய்கிறான். இதற்க்கு நடுவே லில் மாங்கோவை காஸ்பர் கொன்று விட்டதை ஸ்மைலி மூலம் அறிந்த அந்த கூட்டம், அவனை கொல்ல தேடுகிறது.  அதனை அறியும் காஸ்பர் தன்னால் சைராவுக்கு ஆபத்து வந்து விட கூடாது என அவள் உறங்கும் வேலையில் ட்ரைனை விட்டு இறங்கி ஓடுகிறான். அவன் இல்லாததை கண்ட சைராவும் அவனை தேடி வந்துவிட, சைராவை தான் மிக பத்திரமாக அமெரிக்க எல்லையை கடக்க உதவி புரிவதாக கூற, அவளோ அவனையும் தன்னுடன் வந்துவிடுமாறு கூற, லில் மாங்கோவின் கூட்டம். அவனை கொல்ல தேட.. தடதடக்கிறது பயணம்.

காஸ்பர் சைராவை எப்படி அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான், அவனது கதி என்ன, ஸ்மைலி இன் கதி என்ன என்பதை வலியோடு விவரிக்கிறது படம்.

 அமெரிக்கா செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தினர் மத்தியில் சைராவின் தந்தை 'இந்த கூட்டத்தில் பாதி பேர் நிச்சயம் ஊர் பொய் சேர போவத்தில்லை. ஆனால் நான் உன்னை பத்திரமாக கொண்டு செல்வேன்' என அவளிடம் கூறும்போது இலங்கை சகோதரர்களின் நினைவுகள் என் முகத்தில் அறைந்தது. புலம் பெயரும் மக்களின் அவஸ்தையை, அவர்களின் இடர்பாடுகளை படம் தத்ரூபமாக காட்டி கொண்டே செல்கிறது.
    
சைராவாக நடித்திருக்கும் பதினேழு வயதுப்பென்னான பவுலின கைட்டன், சிறுவயது கேட் வின்ஸ்லெட் போல அவ்வளவு அழகு. படம் முழுவதும் அந்த ரயிலினூடே நம்மை அமெரிக்கா எல்லைக்கு அழைத்து செல்கிறது, அட்ரியானோ கோல்ட் மெனின் அருமையான ஒளி ஓவியம். மழையில் பாலிதீன் கவர்களை மூடி ஒளிந்திருக்கும் அந்த பயணிகளிடம் லில் மங்கோ கொள்ளையடிக்கும் அந்த ஒரு காட்சி போதும்.


படத்தை இயக்கி உள்ளவர் காரி பூகுநாகா. இது இவரது முதல் திரைப்படம்.

ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரை உட்பட, பல விருதுகளை இந்த படம் அள்ளியுள்ளது.

சின் நோம்ப்ரே என்றால் பெயர் இல்லாதது என பொருள்.

சின் நோம்ப்ரே பயண வலி.

படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே...




--

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

அருமையான படம், அழகான விமர்ச்சனம்....

infopediaonlinehere said...

ithu mikavum nalla vimarsanam

சென்ஷி said...

மிக நல்லதொரு படம் பற்றிய விமர்சனம். பார்க்கத் தூண்டுகிறது. பகிர்விற்கு நன்றி!

மரா said...

நல்லதொரு படம் இவ்வளவு நாள் பாக்கல. உங்க விமர்சனம் பார்த்து தரவிரக்க ஆரம்பித்துவிட்டேன்.நன்றி.வாழ்த்துக்கள்.

NILAMUKILAN said...

நன்றி சங்கவி

NILAMUKILAN said...

நன்றி இன்போபீடியா

NILAMUKILAN said...

நன்றி சென்ஷி.

NILAMUKILAN said...

நன்றி மயில்ராவணன். உங்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என நம்பறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...