Tuesday, March 9, 2010

பெண்ணே...நீ..!


பொண்ணா பொறந்தவ தான்
பூமி ஆள பொறந்தவதான்
கண்ணா பொறந்தவதான்
கள்ளிக்கு தப்பி பொறந்தவதான்..

பூமி தாய் தான் உண்டு
பூமி தந்தை கேட்டதுண்டா..
மோதல் வார்த்தை 'அம்மா' ன்னு
சொல்லா குழந்தை பார்த்ததுண்டா..

விண்வெளிக்கும் விரைவாளே..
விளையாட்டிலும் வெல்வாளே
விருதுகளும் பல பெற்று
நாட்டின் மானம் காப்பாளே..

பெண் இல்லா துறை ஏதும்
உண்டா இவ்வுலகத்திலே..
இல்லைன்னு சொல்லுங்களே..
அதிலும் இவள் சாதிப்பாளே

உனக்குள்ளே உயிர் வளர்க்க
உனக்கு மட்டும் உரிமை உண்டு.
நீ உயிரை படைப்பதாலே..
நீயும் ஒரு கடவுளானாய்

இருபதாண்டு மேலாக
உன்னை வளர்த்த குடும்பம் விட்டு
எனை வளர்க்க வந்ததாலே
எனக்கும் நீ தாயானாய்...

பெண்கள் தினத்தில்...பெண்மையை வணங்கி... நிலா முகிலன்.

2 comments:

arasan said...

அன்பரே தங்களின் கவிதை வரிகளை படிக்கும் பொது மனது இலகுவாகிறது ..

அனைத்தும் அருமை ..
இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமையான வரிகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...