Thursday, April 1, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-1 ராதா விஜயம்!


'ராதா அப்போ நீ கண்டிப்பா வரியா.. நாங்க 4 பசங்க ஒரு சின்கிள் பெட்ரூம் அப்பார்ட் மென்டில தங்கி இருக்கோம். நீ வந்தா உனக்கு ஒரு தனி ரூம் குடுத்துடறோம். நாங்க 4 பெரும் ஹால்ல படுதுக்கறோம். இருந்தாலும் 4 பசங்க கூட தங்கறதுல உனக்குப்ரோப்ளேம் இல்லையே?'

நான் என்னுடைய அலை பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ராதாவுடனான எனது பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர் எனது அறை நண்பர்கள், ஆனந்த்,அஜய் மற்றும் சந்தர்.
நாங்கள் ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்து வசிப்பவர்கள். யாருக்கும் மணமாகி இருக்கவில்லை.

அது ஒரு நவம்பர் மாதம். வருகிற லாங் வீகென்ட்க்கு நோர்த் கரோலினா போகலாமென முடிவு செய்து வைத்திருந்தோம்.
நான் தொலைபேசி முடித்ததும், என் நண்பர்களிடம் கூறினேன்.
'வருகிற லாங் வீகேண்ட்க்கு என் பிரெண்ட் ராதா நம் வீட்டில் தங்கலாமா...நம்முடன் நோர்த் கரோலினா வரலாமா? உங்களுக்கு ஏதும் ப்ரோப்ளேம் இருக்குதா?'
சந்தர் ஆரம்பித்தான்.
'வேண்டாம் நரேன். மூணு ஆம்பிளைங்க இருக்கற இந்த ஒரு பெட்ரூம் அபார்ட்மென்ட்ல தங்கினா..ராதாவுக்கும் கஷ்டம்.. நமக்கும் கஷ்டம்.'

ஆனந்த்க்கும், அஜய்க்கும் கோவம் வந்து விட்டது.
'மச்சி நீ மூடு..உனக்கென்ன. அவங்க வரதா இருந்தா வந்துட்டு போகட்டுமே. பாவம்' இது ஆனந்த்.
'வரட்டும் மச்சி. நமக்கென்ன ப்ரோப்ளேம் இருக்க போகுது. அவங்களுக்கு ப்ரோப்ளேம் இல்லன்னா நமக்கும் ஒன்னும் இல்லை தானே' -அஜய்.
'இல்ல நரேன் அவங்களுக்கு வேனா ஒரு ஹோட்டல் புடிச்சி தந்திருவோம் நம்மளோட தங்கறது நல்லபடியா படல.'

'டேய் அவங்க...பொண்ணு, பாவம்... ஹோடெல்ல தங்கி பழக்கமிருக்குமோ என்னவோ. நாம அந்த பெட்ரூம் அவங்களுக்கு குடுத்துட்டு ஹால்ல படுத்துக்கலாம். ' ஆனந்த்.

'ராதா நம்ம கூட தங்கினது இந்தியாவுல இருக்கவங்களுக்கு தெரிஞ்சா நம்மள பத்தி தப்பா நெனைக்கமாட்டாங்களா..? ராதாவோட வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க?'

'அவங்களே அத பத்தி நெனைக்கல. உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது.. அதுவும் இந்தியாவுல இருக்கறவங்களுக்கு இங்க நடக்கறது எப்படி தெரியபோகுது. நீதான் டி வீ சேனல்ல வர மேட்டர் படம் எல்லாம் ஒன்னு விடாம பாக்கறியே.. அது எல்லாம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சி போச்சா என்ன...' ஆனந்தின் கோவம் அவன் முகத்தில் தெரிந்தது.

பிரச்சனையை பெரிதாவதை உணர்ந்த நான்...' ஐயோ நமக்குள்ள பிரச்சனை வேண்டாம். ராதாவ வரவேண்டாம்னு சொல்லிடறேன்.'

'இல்ல பாவம் அவங்க இப்பதான் இந்தியால இருந்து வந்திருக்காங்கன்னு சொல்ற..லாங் வீகென்ட் நாலு நாள் லீவு. அவங்க அங்க தனியா என்ன பண்ணுவாங்க. தமிழ் கூட பேசறதுக்கு ஆள் இருக்காது.' கவலைப்பட்டவன் அஜய்.

'அவங்க வரத பத்தி ஒண்ணும் இல்லை. வந்து இங்க ஹோட்டெல தங்கிக்கட்டும்ன்னு தான் சொல்றேன்'. அவங்க வரவேண்டாம்னு சொல்லலை. வரலைனா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன் என்ற கமல் டயலாக் மாதிரி பேசினான் சந்தர்.

'நரேன், இவனுக்கு கஷ்டமா இருந்தா இந்த நாயி வேணா ஹோடெல்ல தங்கிக்கட்டும்.நீ ராதாவ வர சொல்லு ' ஆனந்த் கோவத்தின் உச்சியில் கத்தினான்.

'அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் செய்யணும் யாரு செய்வா வந்தவங்கள் ஒழுங்கா கவனிக்கனும்ல.. நம்ம செய்யற சாப்பாடு அவங்களுக்கு பிடிக்குமோ என்னவோ... ' சந்தர் சொல்ல...உருளை கிழங்கை வறுத்து கொண்டிருந்த ஆனந்த் கரண்டியை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

'என்னவோ இவன் சமைக்கிற மாதிரி பெருசா பேசி கிழிக்கறான். நான் எதுக்கு இருக்கேன். நான் சமைக்க மாட்டேனா.. என்னோட சாப்பாடு சாப்பிட்டு தான வளந்த.. '

'பாத்திரம் எல்லாம் வேணா நான் கழுவி வச்சிடறேன். எனக்கு ஒண்ணும் ப்ரோப்ளேம் இல்லை' என்றான் அஜய்.

'சரி மச்சி ராதாவ வர சொல்லலைனா என்னை விட்டு தொரத்திருவாங்க போல இருக்கு. பேசாம வர சொல்லிடு. பிரச்சன எதுவும் வந்தா நான் பொறுப்பில்ல' வேண்டா வெறுப்பாக சம்மதம் தந்தான் சந்தர்.

வர சொல்லி நானும் ராதாவிடம் சொல்லிவிட்டேன். இங்க நடந்த கூத்துகளை சொல்லவில்லை.

அதுவரை தரையில் தான் அமர்ந்து செய்தி தாள் விரித்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். ராதாவின் வருகையை ஒட்டி புதிய மேசை மற்றும் நாற்காலிகள் வாங்கப்பட்டது.

அந்த படுக்கையறை, புதிய கட்டில் மட்டும் மெத்தை விரிப்புகளுடன் தயாரானது. வீடு சுத்தம் செய்யப்பட்டது. பூ ஜாடிகள் வைக்கப்பட்டன.

ஆனந்த் புதிதாக ஒரு ஜீன்சும் டி ஷர்டும் வாங்கினான். ராதா வரும் நாளில் போட்டுக் கொள்ளபோவதாக சொன்னான்.

ராதா வரும் நாளும் வந்தது. நான் ரயில் நிலையம் சென்று நியூ ஜெர்சியில் இருந்து வரும் ராதாவை பிக் அப் செய்வதற்காக சென்றேன். ராதாவுடன் வந்து அப்பார்ட்மென்ட் கதவை தட்டினேன்.

புது ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் கதவை திறந்தான் ஆனந்த். உள்ளிருந்து ஓடி வந்தான் அஜய். ராதாவை பார்த்த மாத்திரத்தில், சந்தர் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ஆனந்தும் அஜய்யும் ஏன் மேல் பாய்ந்து என்னை அடிக்க ஆரம்பித்தனர்.

ஆம் வந்திருந்தது.. ராதா என்கிற ராதா கிருஷ்ணன்.
--

10 comments:

Anonymous said...

Conference call-il irupathanaal in tha murai vaai vittu sirika mudiamal rombave kadinapattu vitten - Sander :))

க ரா said...

:( டொய்ங்.

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா...

கலக்கல்....

எல் கே said...

sema super

NILAMUKILAN said...

நன்றி அனானி.

NILAMUKILAN said...

நன்றி ராமசாமி கண்ணன்.

NILAMUKILAN said...

நன்றி LK

NILAMUKILAN said...

நன்றி SANGKAVI

Anonymous said...

romba builup koduthappave ninacheen
romba asadu vazhinjiruppanga

Anonymous said...

IDHU NAMMA SUJATHA STYLE.

WELCOME AND CONTINUE

SIRAKI

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...